ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மகா சத்யன் உயிரோடு வரவேண்டும் என்றால் விஷாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டிய நிலையில், இன்றைய எபிசோடில் மீரா வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்க உன்னுடைய அமைதியை சம்மதமாக எடுத்துக் கொள்வதாக சொல்லி மகா அங்கிருந்து கிளம்புகிறாள்.


இதைத் தொடர்ந்து விஷாலும் சைக்கோ போல் நடந்து கொண்டு மீராவிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர, சத்தியன் அருகே வந்த மீரா “எனக்கு நீங்க உயிரோடு இருந்தா போதும்” என்று சொல்லி கண் கலங்குகிறாள்.


அதன் பிறகு சீதா, ராம் மற்றும் துரை ஆகியோர் வந்து மீராவை சமாதானம் செய்து இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல, “இதுவரை நீங்கள் செய்தது போதும், இதுக்கு அப்புறம் எதுவும் செய்ய வேண்டாம்” என்று சொல்லி சத்யனை சென்று சந்தித்து கண்கலங்குகிறாள்.


அடுத்ததாக ஹாஸ்பிடலில் எல்லோரும் தூங்கிய பிறகு மீரா சத்தியனுக்கு கண்ணீருடன் பாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் “மகா எங்க பேச்சு கேட்டா, சத்தியன் உயிரோட இருப்பான்” என்று சொல்ல, “சத்தியனை எதுவும் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க” என்று மீரா கேட்க அவன் “உன்னை காதலித்ததால் தான் எனக்கு எதிரியானான், இல்லனா அவன் என் பக்கத்துல கூட வர முடியாது” என்று மகா சொல்கிறாள். பிறகு மீரா சேர்ந்துவிடும் அடுத்த ஜென்மம் ஒன்று அண்ணன்கள் இல்லாத வீட்டில் பிறக்கணும் என்று சொல்லி செல்ல சேதுவின் முகம் மாறுகிறது.


மறுநாள் காலையில் சீதா, ராம் துரை என எல்லோரும் எழுந்து உயிராக காணவில்லை என செக்யூரிட்டிக்கு போன் செய்ய, மீரா அம்மா வீட்டுக்கு வந்து விட்டதாக சொல்ல, இவர்கள் சாதாரணமாக இருந்து விடுகின்றனர்.


இங்கே மகா விஷாலுக்கும் மீராவிற்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க மறுபுறம் சீதாவிற்கு சந்தேகம் எழுகிறது. விஷாலுடன் மீரா மணமேடை ஏற சீதா குழப்பத்தோடு யோசனையில் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.