ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுபாஷ் ராமின் ஷேரை மாற்றி அவன் எழுதி வாங்க நினைத்து வசமாக சிக்கிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது கோவிலுக்கு வந்த சீதா, ராமுக்காக வேண்டிக்கொள்ள, ராம் இன்னைக்கு பேங்க் போக வேண்டாம் என மன கஷ்டத்துடன் பேச, சீதா அவனுக்கு ஆறுதல் சொல்லி பேங்கிற்கு அழைத்துச் செல்கிறாள்.


பிறகு பேங்க் மேனேஜர் ராமைக் கூப்பிட்டு வைத்து பேசி கண்டிப்பாக லோன் கிடைக்கும் என சொல்கிறார். மேலும் “மகாலட்சுமி மேடம் வரலையா” எனக் கேட்க, ராம் இது எனக்காக வாங்குற லோன் எனக் கூறுகிறான். “அதுக்கு என்ன, கண்டிப்பா லோன் கொடுத்துடலாம்” என்று சொல்லி பேங்க் மேனேஜர் இவர்களை அனுப்பி வைக்கிறார்.


அதனைத் தொடர்ந்து மேனேஜர் மகாலட்சுமிக்கு போன் போட்டு தகவல் கொடுக்க, மகா எல்லாம் தெரிந்தது போல சமாளித்து போனை வைத்து விடுகிறாள். அடுத்து சுபாஷ் மற்றும் அர்ச்சனா இருவரும் சேர்ந்து “ராம் கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது, அவன் கம்பெனி ஆரம்பிச்சா அதோட நாம அவனை மறந்து விட வேண்டியது தான், அந்த சீதாவை ஜெயிக்கவே விடக்கூடாது” என ஏத்தி விடுகின்றனர்.


பிறகு மகா “இது எனக்கும் அந்த தையல்காரனுக்கும் நடக்கிற வார், அவளை ஜெயிக்க விடவே மாட்டேன்” ஆக்ரோஷமடைகிறாள். மறுபக்கம் சீதா ராமுக்காக துணி வாங்கி அளவெடுத்து அவனுக்காக இரவு முழுக்க கண் விழித்து துணி தைக்க, ராம் எனக்காக இப்படி தூக்கத்தை தொலைச்சிட்டு கண் விழிக்கிறாளே என சந்தோஷப்படுகிறான்.


பிறகு சீதா “நாம் இரண்டு பேரும் சேர்ந்து 15 புள்ள பெத்துக்கணும், அதுதான் தன்னுடைய ஆசை” என சொல்ல, ராம், “அப்படியா எப்படி வளர்ப்ப?” என ரொமான்டிக்காக பேசி சீதாவை நெருங்குகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமம் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: The Road Review: த்ரிஷாவின் தி ரோடு சுவாரஸ்யம் கூட்டியதா? இல்லை ஸ்பீட் பிரேக்கரா? முழு விமர்சனம்!


Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!