ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ராமின் தங்கைகள் எல்லோரும் சீதா தனியாக இருக்கும்போது அவளிடம் நல்லவர்கள் போல பேசி நாடகம் போட்டு பிறகு கத்தியால் குத்த முயற்சி செய்ய கடைசி நேரத்தில் துரை வந்து அவர்களை தடுத்து சீதாவை காப்பாற்றுகிறார்.


பிறகு ராம் வீட்டுக்கு வர, இந்த விஷயம் அறிந்து கோபத்தோடு மகாலட்சுமி வீட்டுக்கு வந்து, “நீங்க எல்லாம் பெரிய மனுஷங்களா” என கோபப்பட்டு திட்டுகிறாள். கத்தியைக் காட்டி செல்வியை கூப்பிட்டு "இதெல்லாம் நம்ம வீட்டு கத்தியா" எனக் கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்ல, பிறகு மூன்று பெண்களும் சேர்ந்து சீதாவைக் குத்த வந்த விஷயத்தினை சொல்ல அதைக் கேட்டு சேது அதிர்ச்சி அடைகிறார்.


அதைத் தொடர்ந்து ராம் சீதா அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர, சக்தி மற்றும் துரை இருவரும் இவர்களை பார்க்க வருகின்றனர். இங்கே சேது, “ராம் திரும்பவும் இந்த வீட்டுக்கு வந்துருவான்னு நான் நினைச்சுட்டு இருந்தா, நீங்க தேவையில்லாத விஷயத்தை பண்ணி இப்படி மொத்தமா வர முடியாத மாதிரி பண்ணிட்டீங்க” என கோபப்பட்டு மூன்று பெண்களையும் அடித்து விடுகிறார்.


சத்யா தான் இந்த ஐடியா கொடுத்தா என்று சொல்ல, அதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.