ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் என்ன எனத் தெரிந்து கொள்ளலாம்!


நேற்றைய எபிசோடில் சீதாவைப் பார்க்க ராம் ஜெயிலுக்கு வர, சூர்யா மதுவை பார்க்க மகா வீட்டிற்கு வந்திருந்தப்நிலையில் இன்று நடக்க போவது என்னனு பார்க்கலாம் வாங்க. 


சீதா, ராமை பார்க்க வெளியே வர, சீதாவுடன் இருந்த வயதான பெண் கைதி ஒருவர் “ராம் - சீதா தான் நல்ல ஜோடி” என்று சொல்கிறார். உடனே வார்டன் அம்மா, “அந்த பொண்ணு தப்பு பண்ணிட்டு தானே உள்ள வந்திருக்கு” என்று சொல்ல, அதெல்லாம் அவ மாமியார் பண்ண வேலை என்று சொல்கிறாள். 




அடுத்து சீதாவும் ராமும் சந்தித்துக் கொள்ள, இருவரும் கண் கலங்கி பீல் செய்கின்றனர். “நான் தப்பு பண்ணேன், அதனால் உள்ள வந்திருக்கேன்” என்று சீதா சொல்ல, அதற்கு ராம், “இல்ல நீ தப்பு பண்ணியிருக்க மாட்ட, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று சொல்கிறான்.


மேலும், ”உன்னை வெளியே எடுக்க என்ன பண்ணனும்?” என்று கேட்க, “நீங்க எதுவும் பண்ண வேண்டாம்... உங்க சித்தியையும் அர்ச்சனாவையும் என்ன வந்து பார்க்க சொல்லுங்க” என்று சொல்கிறாள் சீதா. 


மேலும், “நான் சீக்கிரம் வெளியே வருவேன், தப்பு பண்ணவங்க ஜெயிலுக்கு வருவாங்க” என்று சொல்கிறாள். மறுபக்கம் மகா கோவிலுக்கு சென்றுள்ள மதுமிதாவுக்கு போன் செய்து சூர்யா சீதாவை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு வெளியே வந்து விட்டதாக மாற்றி சொல்ல, மது கோபப்படுகிறாள்.


மேலும் “உன்னை கூட்டிட்டு போக வந்திருப்பதாக சொல்ல எங்க தங்கச்சியை ஜெயிலுக்கு அனுப்புவான், அவன் கூட நான் போய் வாழணுமா?” என கொந்தளிக்கிறாள். 




அடுத்து வீட்டுக்கு வரும் மதுமிதா, சூர்யாவிடம் நீ எப்படி வெளியே வந்த என்று கேட்க, “சீதா உள்ள போய்ட்டா என்னை வெளியே அனுப்பிட்டாங்க” என்கிறாள். உடனே, “என் தங்கச்சி தப்பு பண்ணி இருப்பாளா? என்று சூர்யா கேட்க , “அப்போ நான் தப்பு பண்ணி இருப்பானா” என்று மதுமிதா கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.


கோபத்தில் மதுமிதா உன்கூட வந்து வாழ முடியாது என்று சொல்ல, சூர்யா ”அப்படினா நான் கட்டிய தாலியை கழட்டிக்கொடு” என்று கேட்கிறான். இப்படியான பரபரப்பான சூழலில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.