தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவின் அப்பா அம்மா வீட்டிற்கு வர மகா சிரித்த முகத்தோடு அவர்களை வீட்டிற்கு அழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, மகா சீதாவின் அப்பா அம்மாவை அழைத்துச் சென்று உட்கார வைத்து பேசும்போது எல்லாரும் மகாவின் மாற்றம் குறித்து பேச இவர்களும் அதனை நம்பி விடுகின்றனர். அடுத்ததாக ரூமுக்குள் சென்று சீதாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது மீரா, “மகா ஏதோ பிளான் போடுறாங்க” என்று உண்மையை உடைக்கிறாள். 


இதனால் ராஜசேகர் சீதாவை ஊருக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று முடிவெடுக்க, “பாஸ் இதுக்கு ஓகே சொல்லுவாங்களானு தெரியலையே” என்று சொல்ல, மீரா “ராம் அதெல்லாம் நிச்சயம் ஓகே சொல்லுவான். நீ ஊருக்கு போய்டு சீதா” என்று சொல்கிறாள். பிறகு ராஜசேகர் மகா மற்றும் சேதுவிடம் “சீதாவே சின்ன பொண்ணு, அவளுக்குள்ள இப்போ ஒரு குழந்தை வளருது. அதனால் நாங்க அவளை ஊருக்கு கூட்டிட்டு போய் பார்த்துக்கறோம்” என்று சொல்ல மகா ஷாக் ஆகிறாள். 


“இவ ஊருக்கு போய்ட்டா குழந்தையை பெத்துக்கிட்டு தான் ஊருக்கு வருவா. அப்புறம் ராமிடம் இருந்து இருந்து இவளை பிரிக்கவே முடியாது” எனக் கணக்கு போட்டு “சீதா இங்கயே இருக்கட்டும். நாங்க அவளை நல்லபடியாக பார்த்துக்கறோம். சீமந்தம் முடிந்ததும் நீங்க ஊருக்கு கூட்டிட்டு போங்க” என்று சொல்கிறாள். சேதுவும் அப்படியே சொல்ல ராஜசேகர் தனது மனைவி உமாவை சீதாவுக்கு துணையாக இங்கேயே விட்டுச் செல்கிறார்.


அடுத்ததாக மகா கடைசி நாள் விரதத்தையும் பெரிய பூஜை செய்து வெற்றிகரமாக செய்து முடிக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறவடைகிறது.