Peranbu Serial: இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் பிரபல சீரியல் ‘பேரன்பு’ .. க்ளைமேக்ஸ் இதுதான்!

நீதிபதி கார்த்தி தன்னை சந்தித்துப் பேசிய விஷயத்தை சொல்ல, ஷண்மதி அவனின் காதலை புரிந்து கொள்கிறாள்.

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு. இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் க்ளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

Continues below advertisement

இப்படியான நிலையில் க்ளைமாக்ஸ் வாரத்தில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். கார்த்திக், ஷண்மதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் ஷண்மதியின் ஆசைப்படி வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் 6 மாதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல, கார்த்திக் இதைக் கேட்டு விடுகிறான். இதுவரை இவளது மனது மாறாத நிலையில் உடனடியாக ஷண்மதிக்கு விவாகரத்துக்கு கொடுத்து அவளை படிக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறான்.

நீதிபதியிடம் பேசி விவகாரத்தையும் வாங்கி விட, இறுதியில் நீதிபதி கார்த்தி தன்னை சந்தித்துப் பேசிய விஷயத்தை சொல்ல, ஷண்மதி அவனின் காதலை புரிந்து கொள்கிறாள். இருந்தாலும் வீட்டில் இருந்து கிளம்பும் போது ராஜேஸ்வரி அவள் வெளிநாட்டில் படிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதை சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட கிளம்புகிறாள்.

ஷண்மதி, வானதி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது எம்.பி. மனைவி ஷண்மதியை கொல்ல வர, ராஜேஸ்வரி கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இப்படியான நிலையில் கார்த்திக், ஷண்மதி வாழ்க்கையில் ஒன்று சேரப்போவது எப்படி என்ற காட்சிகளுடன் இந்த வார க்ளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. பேரன்பு சீரியல் க்ளைமேக்ஸை நெருங்கியுள்ள நிலையில், இந்த சீரியலின் ரசிகர்கள் பிரியாவிடை கொடுக்க ரெடியாகி வருகின்றனர்.

மேலும் விரைவில் மாற்று சீரியலாக ஒரு புது சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola