ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி சகுந்தலாவிடம், “எனக்கும் பூஜாவுக்கும் நடக்க இருப்பது கல்யாணம் இல்லை, அது வெறும் டிராமா” என்கிறான். சகுந்தலா வீட்டில் மறைந்திருக்கும் பூஜாவும் புஷ்பாவும் அதைக் கேட்டுவிட, பூஜா அதிர்ச்சியாகிறாள்.


சகுந்தலா தீர்த்தச் சடங்குக்கு வர ஒப்புக்கொண்டு, வெற்றி வீட்டுக்கு வந்து தீர்த்தச்சடங்கு செய்கிறாள். ஏன் வெற்றி இப்படிச் செய்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க பூஜா முடிவெடுக்கிறாள்.


எப்போதும் வெற்றியை ஃபாலோ செய்ய சங்கிலியிடம் சொல்கிறாள். மறுநாள் துணி தைக்க கொடுக்கப் போகும் வெற்றியைப் பார்க்க ரோஹித் வர, அவனும் துணி அளவு கொடுக்க, ரோஹித் தான் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான், அதற்காகத்தான் வெற்றி இந்த டிராமா போடுகிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும் பூஜா டென்ஷனாகிறாள்.


ரோஹித் மிகவும் ஃபீலாகி வெற்றியிடம் இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா உயிரோடயே இருக்க மாட்டான் என்று பேசுகின்றான். இப்படியான நிலையில்  மீனாட்சி பொண்ணுங்க தொடரின் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.