Maari: காணாமல் போன கலசம்..தேடி அலையும் சூர்யா...கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்

ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறார்.

Continues below advertisement

மாரி சீரியலில் கலசத்தை தேடும் சூர்யாவுக்கு உண்மைகள் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்  ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என் மருமகள் தான் கலசத்துக்கு பூஜை செய்தாள் என்று பொய் சொல்லி சமாளித்து போனை வைத்து விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் எதுக்கும் நாம் மாரி வீட்டுக்கு சென்று பார்த்து விடலாம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.  அப்போது ஆஸ்பத்திரியில் மணியின் குழந்தைக்கு முடியாமல் இருக்க மணியும் மனைவியும் வீட்டிற்கு வந்து ஒரு பொருளின் மேல் இருக்கும் பாம்பை பார்த்து ஆரத்தி காட்டுகின்றனர். உடனே அந்த இடத்தை விட்டு அந்த பாம்பு விலகி செல்லும் நிலையில் அந்த பொருள் ஒரு கலசம் என்று தெரிய வருகிறது.

 மணியின் மனைவி கலசத்தை திருடியதால் தான் நம்ம குழந்தையை பாம்பு கடித்தது‌. தயவுசெய்து கொண்டுபோய் கொடுத்துவிடு என்று சொல்ல மணியும் சங்கர பாண்டிக்கு போன் செய்து இந்த மாதிரி பாம்பு என்னுடைய மகளை கடிச்சிடுச்சி. அதனால நான் கலசத்தை கொண்டு வந்து கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனைக் கேட்டு தாரா அதிர்ச்சியடைகிறார். உடனே மணியுடன் இருக்கும் இன்னொரு ரவுடிக்கு போன் செய்து உனக்கு பணம் தருகிறேன். அவனிடம் இருந்து கலசத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கேயாவது போட்டு விடு என்று சொல்கிறார். 

அவனும் சரி என சொல்லிவிட்டு மணியிடம் இருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் மணி ஆஸ்பத்திரிக்கு வந்து தன் மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். அவரோ ஒன்றும் புரியாமல் வாங்க கோவிலுக்கு சென்று நாம் முறையிடலாம் என்று சொல்லி மணியை கோயிலுக்கு அழைத்து செல்கிறாள். இதற்கிடையில் சூர்யாவும் தினேஷூம் கலசத்துக்காக பல இடங்கள் தேடி வேறு வழியில்லாமல் கோயிலுக்கு போலாம் என்று முடிவு செய்கிறார்கள். 

இருவரும் கோயிலுக்கு வர அங்கு மணியின் மனைவி சாமியிடம் கலசம் திருடி போன விஷயத்தை பற்றி பேச அதை சூர்யா கேட்டு விடுகிறான். தொடர்ந்து அவர் மணியிடம் அது எங்களுடைய கலசம் தான் எங்கே என்று கேட்கிறார்.  மணியோ தனது நண்பன் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்ட விஷயத்தை சொல்கிறார். மேலும் உங்களுக்கு கலசத்தை யார் எடுத்துக் கொடுத்தது என்று சூர்யா கேட்க சங்கர பாண்டியன் தான் என விஷயத்தை மணி சொல்கிறார்.  இதனைக்கேட்டு ஷாக்காகும் இருவரும் ரவுடியிடம் செல்ல அங்கு கலசம் இருப்பதை பார்த்து விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola