மாரி சீரியலில் மாரியின் விரல் ரேகைப்பதிவு கொண்ட விவாகரத்து பத்திரத்தை கண்டு சூர்யா அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் சூர்யாவை திருமணம் செய்யக்கூடிய பெண்ணான ஜாஸ்மினிடம் விவாகரத்து பத்திரத்தில் மாரியை கையெழுத்திட வைக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என தாரா சொல்கிறார். ஆனால் இதற்கு மாரி மறுக்க, அவருக்கு மயக்கம் மருந்து கொடுத்து தூங்க வைத்து அவரிடமிருந்து ஜாஸ்மின் கைநாட்டு வாங்கும் காட்சிகள் இடம் பெற்றது. 


இந்நிலையில் இன்றைய எபிசோடில் மாரி கையெழுத்து போட்ட பத்திரத்தை தாராவிடம் ஜாஸ்மின் கொடுக்க அவர் சந்தோஷமடைகிறார். நாளைக்கு சூர்யா வந்தவுடன் இந்த பத்திரத்தை காட்டி கையெழுத்தை வாங்கி விட்டால் போதும் மாரியை இந்த வீட்டில் அனுப்பி விடலாம் என்று தாரா பேசுகிறார். மறுநாள் காலை சூர்யா வரவும் மாரி கையெழுத்து போட்ட விவாகரத்து பத்திரத்தை கொடுத்து தாரா அதிர்ச்சி அளிக்கிறார்.






மாரி  கைநாட்டா இது என்று சூர்யா கேட்க, ஆமாம் ஜாஸ்மின் தான் மாரியிடம் கை நாட்டு வாங்கி கொடுத்தாள் என்று தாரா சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் சூர்யாவை கையெழுத்து போட சொல்லிக்கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்று மாரி பெயருக்கு வருகிறது. ஹாசினி மாரியை எழுப்பி கீழே அழைத்து வருகிறார். அப்போது மாரி அனைவர் முன்னாலும்  பார்சலை வாங்கும்போது கையெழுத்து போட்டு  அனைவரும் அதிர்ச்சி கொடுக்கிறார். 


உடனே சூர்யா மாரியிடம் உனக்கு கையெழுத்து போட தெரியுமா என்று கேட்க, ஆம் என அவர் தெரிவிக்கிறார். அப்போ இந்த விவாகரத்து பத்திரத்தில் நீ கைநாட்டு வக்கலையா என்று கேட்க உண்மை தெரிய வருகிறது. இதனால் சூர்யா கோபத்தில்  ஜாஸ்மீனை திட்டி விவாகரத்து பத்திரத்தை கிழித்து போடுகிறார். இதனையடுத்து மாரியிடம் மேலே ரூமில் இருக்கும்போது சூர்யா,  உனக்கு எழுத தெரியுமா என்று கேட்கிறார். 


அப்படியென்றால் எழுதிக்காட்டு என்று சொல்ல மாரி நோட்டில் சூர்யா மாரி... சூர்யா மாரி என்று எழுதுகிறார். ஸ்ரீராமஜெயம் என்று எழுதப்போவதாக சொல்லிவிட்டு என் பெயரை எழுதி வைத்திருக்காய் என்று அதனைப் பார்த்து சூர்யா கேட்க,  என்ன பொருத்தவரைக்கும் நீங்க தான் ஸ்ரீ ராமர் என்று சொல்ல சூர்யா ஃபீல் ஆகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. இதனால் மாரி சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.