தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி தீபாவுக்காக காய்ச்சிய பாலில் ஐஸ்வர்யாவின் அம்மா யாருக்கும் தெரியாமல் மாத்திரையைக் கலந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது மீனாட்சி தீபாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க, அதை அவள் குடிக்கப்போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் பண்ண, பாலை கீழே வைத்து போன் பேசுகிறாள். பிறகு போனை வைத்துவிட்டு மீண்டும் குடிக்கப் போகும்போது கார்த்திக் உள்ளே வந்து “என்ன தீபா குடிக்கிறீங்க?’ என்று கேட்க, “கோல்டா இருப்பதால் அக்கா பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தாங்க” என்று சொல்ல, “நீங்க அதெல்லாம் குடிக்க வேண்டாம்” என்று கார்த்திக் சொல்கிறான். 


தீபா, “ஏன் சார் குடிக்க வேண்டாம்னு சொல்றீங்க?” என்று கேட்க, “நீங்க பாடுறதை தடுக்கிறதுக்காக நிறைய சதி நடக்குது, பால்ல ஏதாச்சும் கலந்து கூட இருக்கலாம், வேண்டாம்” என்று சொல்ல, மீனாட்சியும் கார்த்திக் சொல்வது சரிதான் என்று சொல்ல, தீபா பாலைக் குடிக்காமல் விட்டு விடுகிறாள். இதனால் ஐஸ்வர்யாவின் பிளான் ப்ளாப் ஆகிறது. 


பிறகு கார்த்திக் தீபா ஆகியோர் கச்சேரிக்கு கிளம்பி அபிராமியைக் கூப்பிட, அவள் ஐஸ்வர்யாவுடன் செக்கப் செல்வதாக சொல்கிறாள். மேலும் தன்னுடன் அருணாச்சலமும் வருவதால் அவரும் கச்சேரிக்கு வர முடியாது என சொல்லி விடுகிறாள். அருணை கச்சேரிக்கு கூப்பிட, அவன் ஆபீஸில் முக்கியமான வேலை இருக்கிறது என்று கிளம்பிச் சென்று விட, மீனாட்சியிடம் “அண்ணி நீங்க வரிங்களா?” என்று கேட்க, “நான் இப்படி கண்டிப்பா வரேன்” என்று சொல்ல, மீனாட்சி கார்த்திக், தீபா ஆகியோர் கிளம்பி வருகின்றனர்.


கிளம்பும்போது தீபா அபிராமி மற்றும் அருணாச்சலத்துடன் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்ப, அபிராமி தீபாவைக் கூப்பிட்டு “நீ நல்லா பாடுவது எனக்கு தெரியும், ஆனால் இன்னைக்கு கோயிலில் விளக்கு போடணும், அதை மறந்துடாத” என்று சொல்லி அனுப்புகிறாள். 


மறுபக்கம் கோயிலுக்கு வந்த தர்மலிங்கம் குடும்பம் முருகனிடம் “தீபாவோட வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கணும், அவளுடைய ஆசை நிறைவேறனும்” என்று வேண்டி தீர்த்தத்தை வாங்க, இதை நோட்டமிட்ட ரூபஸ்ரீ தர்மலிங்கத்துக்குத் தெரியாமல் அந்தத் தீர்த்தத்தில் மயக்க மாத்திரையை கலந்து விடுகிறாள். கோயில் தீர்த்தம் என்பதால் தீபா மறுப்பு தெரிவிக்காமல் கண்டிப்பாக குடிப்பா.. அதனால வாந்தி மயக்கம் வந்து பாட முடியாமல் போய்விடும் என கணக்கு போடுகிறாள் ரூபஸ்ரீ. 


பிறகு இவர்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வர தீபா கச்சேரிக்கான அலங்காரங்களையும் ஏற்பாடுகளையும் பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.