ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் என்னும் சீரியல் ஒளிபரப்பாகும் நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கவுள்ளது என்பதை காணலாம். 


ரசிகர்களின் எண்ணத்தை நிறைவேற்றுமா? 


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் ராஜ். சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் கார்த்திகை தீபம் என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த சீரியல் இன்று முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜூம், ஹீரோயினாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார்.


கதையின் கரு 


நிற பிரச்சனையை சந்திக்கும் தீபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அழகாக பாடும் திறமையிருந்தாலும்,  தன்னுடைய நிறத்தால் தீபா தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார். திடீரென எதிர்பாராத சூழ்நிலையில் தீபா மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓவான கார்த்திக்கை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கை என்னவாகிறது? தீபாவின் கனவு நனவாகுமா? என்பதே கதையாகும். 


முதல் எபிசோடின் அப்டேட்: 






இன்றைய எபிசோடில் கிராமத்து அய்யனார் கோயிலில் குறி சொல்லுபவர் வந்து சாமி ஆடுகிறார். பின் கோயிலில் தீபாவின் குடும்பத்தினர் அனைவரும்  சேர்ந்து அங்கு வருபவர்கள் கால்களை கழுவி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். அப்போது ஒருவர் என்ன விஷயம் கேட்கும்போது, என் பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும், அதுக்காக நான் பாத பூஜை பண்றோம் என சொல்கிறார்கள். 


இதனைத் தொடர்ந்து தீபா குடும்பம் அய்யனாரிடம் குறி கேட்க உன் பொண்ணு ராஜகுமாரி என்று சொல்லி தீபா அறிமுகம் காட்சி இடம் பெறுகிறது. பின்னர் தீபாவின் அப்பா என் பொண்ணுக்கு வர போற மாப்பிள்ளை பத்தி கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்க ஹீரோ கார்த்திக் அறிமுக காட்சி இடம் பெறுகிறது.  ஒரு பெரிய அழகுப்பொருள் தயாரிப்புக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவார்ட் வாங்குகிறார்.  அதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் அம்மா அபிராமி அறிமுகமாகிறார்.


அபிராமி வீட்டில் பூஜை செய்த பின்னர் கிச்சன் சென்று சாப்பாடுகளை ருசி பார்த்து மீனாட்சியிடம் குறைகளை சுட்டிக்காட்டுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல கார்த்திக் வந்துருவான் என்று சொல்கிறார். இதனையடுத்து தீபா கோவமாக வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கோவிலில் எதுக்கு வேண்டுதல் நிறைவேற்றினாய் என கேட்கிறார்.  உனக்கு திருமண நடப்பதற்காக தான் அந்த மாதிரி பண்ணுனோம் என்று அவர் பதிலளிக்கிறார். 


உடனே தீபா அது வந்து நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும். நீ எதுக்கு இதே மாதிரி எல்லாம் பண்ற என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, அந்த வீட்டுக்கு ராஜஸ்ரீ வந்து கச்சேரிக்கு நேரம் ஆச்சு கிளம்பலாம் என்று சொல்லி அழைத்து போகிறார். அவார்டு பங்க்ஷனில் கார்த்திக் அவார்ட் வாங்கியதும்,  இதுக்கெல்லாம் காரணம் எங்க அம்மா தான் என்று சொல்லி புகழ்ந்து தள்ளுகிறார்.  அருகில் கோயில் கச்சேரிக்கு செல்லும் தீபா பாட ரூபஸ்ரீ வாய் அசைக்கிறார். அப்போது இந்த பாட்டு சத்தம் கேட்டு கார்த்திக் கோயிலுக்கு வருகிறார்.