ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா பாட்டுப் போட்டி பற்றி கொளுத்தி போட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது பரமேஸ்வரி பாட்டி தீபாவுக்கும் மலருக்கும் பாட்டுப் போட்டி நடத்த போவதாக சொல்ல, தீபா “நம்ம பாடினால் கார்த்திக்கு பல்லவி நான் தான் என்ற உண்மை தெரிந்து விடும்” எனத் தயங்குகிறாள். அபிராமி இவளுக்கு பாட்டு பாட வராதே என நினைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தவிக்கிறாள். 


இருந்தாலும் தீபாவை விட்டுக் கொடுக்காமல், “சமையல்லயே நீ அசத்திட்ட, உன்னால் பாட்டும் பாட முடியும், ஒருநாள் நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு பாடு” என்று சொல்ல, தீபா மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதம் சொல்கிறாள்.


அதன் பிறகு மலர் கார்த்தியிடம் தனியாகப் பேச ஆசைப்பட்டு முத்து பட பட பாணியில் ஒரு பேப்பரில் இரவு 10 மணிக்கு தன்னை தோட்டத்தில் தனியாக சந்திக்கவும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என எழுதி தூக்கி போட, அதை ஐஸ்வர்யா எடுத்து படித்து அருண் எழுதியதாக நினைத்துக் கொண்டு தூக்கி போட, அருண் அதை எடுத்து படித்து ஐஸ்வர்யா எழுதியதாக நினைத்து கொள்கிறான். 


இப்படி இந்த லெட்டர் எல்லாரிடமும் வலம் வந்து கார்த்தியின் மீதும் விழ, அவன் தீபா என்று நினைத்துக் கொள்ள அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததும் அதை தீபா மீது தூக்கிப் போட தீபா கார்த்திக் ஏதோ பேச ஆசைப்படுவதாக புரிந்து கொள்ள, கடைசியாக அந்த லெட்டர் பரமேஸ்வரி பாட்டி கையில் சிக்கி விடுகிறது. இதைப் படித்து பார்த்த பாட்டி கடுப்பாகிறார். 


இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.