ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா குணாவிடம் இருந்து தப்பித்து கார்த்தியை பார்க்க ஆட்டோவில் கிளம்பிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, தீபா ஆட்டோவில் வேகவேகமா வந்து கொண்டிருக்க திடீரென ஆட்டோ பஞ்சராகி  நிற்கிறது. இதனால் தீபா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள், கார்த்திக் சாரை எப்படியாவது பார்த்து தடுத்து நிறுத்தணும் நீ தான் எனக்கு உதவி செய்யணும் என வேண்டுகிறாள்.


மறுபக்கம் கார்த்திக் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து விட்ட நிலையில், இங்கு முருகன் போட்டோக்கள் ஒட்டிய ஆட்டோ ஒன்று வந்து நிற்க “ட்ரைவர் எங்கம்மா போகணும்?” என கேட்கிறார். தீபா அந்த ஆட்டோவில் ஏர்போர்ட் வந்து இறங்குகிறாள், பணம் இல்லை என்று சொல்ல அந்த ஆட்டோ டிரைவரும் முதலில் உன் புருஷனை போய் பாருமா என அனுப்பி வைக்கிறார்.


தீபா ஏர்போர்ட்டுக்குள் நுழைய அவளிடம் போர்டிங் பாஸ் என எதுவும் இல்லாததால் செக்யூரிட்டி உள்ளே விட, மறுபடியும் தீபா கார்த்திக் சார் என்று கத்த, கார்த்தியும் தீபா குரலைக் கேட்டு திரும்பி பார்க்கிறான். தீபா கார்த்தியை நோக்கி ஓடிச் சென்று கட்டிக் கொள்கிறாள். “இனிமே உங்கள விட்டு போகமாட்டேன்” என்று சொல்ல, பின்னாடி அபிராமி நிற்பதைப் பார்த்து இருவரும் ஷாக் ஆகின்றனர்.


கடைசியாக அபிராமி தீபாவை வீட்டுக்கு வா என்று அழைக்க, கார்த்தியும் அமெரிக்கா முடிவை கை விடுகிறான், பிறகு மூவரும் வீட்டிற்கு வருகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.