தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை தவிர்த்து வீட்டில் உள்ள எல்லாரிடமும் புதிய கம்பெனி வாங்கி இருக்கும் விஷயத்தை சொன்னதைத் தொடர்ந்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, மறுநாள் காலையில் தீபா கார்த்திக்கிடம் “நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் சார், போகட்டுமா?” என்று கேட்க, "வெளியே வேலைக்கு போகிறதுக்கு நம்ம கம்பெனிக்கே வாங்க" என்று கார்த்திக் அழைக்க, தீபா அபிராமி சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து “நான் வெளியேவே வேலைக்கு போறேன்” என்று சொல்ல, கார்த்தியும் தீபா மனநிலையை புரிந்து கொள்கிறான். 


அடுத்ததாக தீபா அபிராமி ஆடியோ கம்பெனிக்கு இன்டர்வியூக்கு வருகிறாள். கார்த்திக் அங்கு ஒவ்வொருத்தரையாக அழைத்து இன்டெர்வியூ எடுத்து கொண்டிருக்க, ஸ்நேகா தீபா மீது இருக்கும் பழைய வன்மத்தை மனதில் வைத்து கொண்டு “ரெஸ்யூம் இல்லாமல் வந்ததால் நீங்க நேர்காணலில் பங்கேற்க முடியாது” என ஷாக் கொடுக்கிறாள். 


அந்த நேரம் பார்த்து இளையராஜா அங்கு வர, அவன் கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல, தீபாவை உள்ளே அழைக்க கார்த்திக்கை பார்த்த அவள் ஷாக் ஆகிறாள். இதனைத் தொடர்ந்து கார்த்திக் “சரி நான் உங்களை இன்டெர்வியூ எடுக்கறேன், நீங்க வேற ஏதாவது கம்பெனிக்கு போனால் பயன்படும்” என்று சொல்லி கேள்விகளை கேட்க தீபா அனைத்திற்கும் அசால்டாக பதில் சொல்லி அசர வைக்கிறாள். 


இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.