தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


நேற்றைய எபிசோடில் தீபா காணாமல் போக, கார்த்திக் எல்லா இடத்திலும் தேடி டென்ஷன் ஆன நிலையில், ரூமுக்கு செல்லும்போது அங்கு ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கிறான். அந்த லெட்டரை எடுத்து படிக்கையில் தீபா தன்னுடைய மன நிம்மதிக்காக ஊர் எல்லையில் உள்ள கோயிலுக்கு வேண்டுதல் செய்வதற்காக செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் மீண்டும் தானே வந்து விடுவேன் எனவும் எழுதி இருக்கிறாள். 


மேலும் அந்த லெட்டரில் “நான் கொண்டு வந்த சிலையை மண்ணுக்குள் புதைக்கும் அளவிற்கு என் மீது என்ன வன்மம்? ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு புரியவில்லை” என எழுதி இருப்பதைப் பார்த்து கார்த்தி ஐஸ்வர்யா மீது மிகவும் கோபம் கொள்கிறான். 


உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று “நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க? உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமக தானே?” என கேள்வி கேட்கிறான். “நீங்களும் அவளைப் போல இந்த வீட்டுக்கு வாழ தானே வந்தீங்க” என ஆவேசப்படுகிறான்.


ஐஸ்வர்யா “நான் ஒன்றும் செய்யவில்லை” என்று சொல்ல, “நீங்கதான் கோயில் திருவிழாவில் தீபாவை கொலை செய்ய முயற்சி செய்தது என்பதும் எனக்குத் தெரியும்” என உண்மையை போட்டு உடைக்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். அருண்,  “ஐஸ்வர்யா சின்ன சின்ன தப்பு பண்ண கூடியதுதான்.. ஆனால் கொலை முயற்சி எல்லாம் செய்திருக்க மாட்டா” என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறான். 


உடனே அங்கு வரும் அபிராமி,  இதில் யார் பக்கமும் நான் பேச முடியாது, அது மகன்களுக்குள் பிரச்சனையை உண்டு செய்யும். இது சாமி பிரச்சனை என்பதால் குறி கேட்கலாம்” என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.