ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கதிர் கண் முழித்து விட்டதாக சொல்ல சொல்லி பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . 


வார்டு பாய் சொன்ன விஷயம் கேட்டு ஹாஸ்பிடலுக்கு வரும் நட்சத்திரா, அவனிடம் நடந்த விஷயங்களை கேட்டு அறிந்து கொள்கிறாள். பிறகு "கதிர் கண் விழித்தால் ஆபத்து, அவனை போட்டு தள்ளிட வேண்டியது தான்" என்று பிளான் போட்டு ஒரு ரூமுக்குள் சென்று நர்ஸ் கெட்டப்பிற்கு மாறி வெளியே வருகிறாள். 


இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்க்கும் கார்த்திக், அவளுக்கு போன் செய்து "எங்க இருக்க?" என்று விசாரிக்க, நட்சத்திரா "நம்ம வீட்டில் தான் இருக்கேன்" என்று சொல்கிறாள். "கதிர் கண் விழித்து விட்டதாக சொன்னாங்க, நீங்க வாரீங்களா?" என்று கேட்க, அவள் "நீங்க போங்க சார் நான் பின்னாடியே வரேன்" என்று சொல்கிறாள். 


பிறகு நர்ஸ் வேடத்தில் உள்ளே செல்ல முயற்சி செய்ய, கார்த்திக் அங்கு வர, நட்சத்திரா முகம் காட்டாமல் திரும்பி கொள்கிறாள். கார்த்திக் டாக்டர் குறித்து கேட்க, நட்சத்திரா முகத்தைக் காட்டாமல் பதில் சொல்லி அனுப்பி வைத்து விட்டு திரும்பவும் பழையபடி உடை மாற்றிக் கொண்டு வந்து கார்த்தியுடன் பேசுகிறாள். 


இதற்கிடையில் கார்த்திக் டாக்டரை சந்தித்து எதையோ சொன்ன நிலையில், பிறகு நட்சத்திராவை அழைத்துக் கொண்டு ரூமுக்குள் செல்ல, அங்கு கதிர் இல்லை, டாக்டர் கதிர் கண் விழித்து நன்றாக பேசியதாவும், பிறகு காணாமல் போய் விட்டதாகவும் சொல்ல நட்சத்திரா ஷாக் ஆகிறாள். கார்த்திக் “கல்யாண விஷயம் பற்றி கேட்கணும்னு இருந்தேன், ஆனால் முடியாமல் போய்டுச்சு” என்று வீட்டுக்கு கிளம்பி வருகிறான். 


வீட்டில் அபிராமி நட்சத்திராவுக்காக காத்திருந்த நிலையில், அவளும் வீட்டுக்கு வந்து விட, அபிராமி பரம்பரை வளையலை தருவாளா? இல்லையா? என்று எதிர்பார்க்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.