தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாரதி ஸ்கூட்டி பெஞ்சராகி வழியில் நிற்க ஆதி அவளை ஆபிஸ் அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


லதா மற்றும் பாரதி என இருவரும் ஆதி எழுதிய கவிதைகள் முழுவதையும் படித்து முடித்து விட அதில் யார் அந்த பெண் என்ற விஷயம் தெரிய வராததால் ஆதியின் போனை பார்த்தால் உண்மை தெரிய வரும் என முடிவெடுக்கின்றனர். அதன் பிறகு ஆதியின் போனை எடுக்க அடிக்கடி ரூமுக்குள் சென்று வர ஆதி தொடர்ந்து போன் பேசி கொண்டே இருக்கிறான்.


இவர்களின் நடத்தையில் ஆதிக்கும் சந்தேகம் வருகிறது, ஆனால் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு மீட்டிங் என்று ஆதியை அழைத்து செல்ல அவன் போன் ரூமில் இருப்பதை பார்த்து லதாவும் பாரதியும் உள்ளே வருகின்றனர்.


ஆதியின் போனை எடுக்க அதில் பாஸ்வோர்ட் போடப்பட்டு இருப்பதால் போனை அன்லாக் செய்ய முடியாமல் போகிறது. திடீரென்று ஆதியும் திரும்பி வர இவர்கள் சோஃபா பின்னாடி ஒளிந்து கொள்கின்றனர். இதை கவனித்து விடும் ஆதி காதலியிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவது போல் பேசி வெறுப்பேற்றுகிறான். இறுதியாக வேண்டுமென்றே இவர்களை ரூமுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே கிளம்பி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க 


Chandrababu Naidu: ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு யாகம்..! அதிரடி திட்டங்களுடன் ஜெகன் மோகன் - ஆந்திர அரசியல் கள நிலவரம்


Udhayanidhi Stalin:’நிதியைத்தான் கேட்டேன்.. தவறாக பேசவில்லை ’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் உதயநிதி


ரூ.2 லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை; திண்டுக்கல்லில் மருத்துவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு