சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றையே (மே.21) எபிசோடில் தாரா குணசேகரனிடம் சென்று "ஏன் நீங்களும் அப்பத்தாவும் எங்களை ஒதுக்குறீங்க? ஒரு நாள் என்னை பேத்தி இல்லை என சொல்றாங்க. ஒரு நாள் பேத்தின்னு சொல்றாங்க. பெரியவங்க நீங்க எப்படி வேணும்னாலும் பேசலாம். சின்ன பிள்ளைங்க நாங்க அதை எப்படி எடுத்துக்குறது?" என சங்கடமாக கேட்கிறாள். "எத்தனை தடவை தான் காது குத்துவாங்க?" என குணசேகரன் கேட்க, "எங்க முறையா குத்திவிட்டீங்க" என நந்தினி திருப்பிக் கேட்கிறாள்.  “எப்படி இந்த குணசேகரன் இல்லாம நடக்குது எனப் பார்க்கலாம்” என சவால் விடுகிறார்.



அனைவரும் வேனுக்காக காத்திருக்க கரிகாலன் வந்து வேவு பார்க்கிறான். அவனை மிரட்டி விரட்டிவிடுகிறான் சக்தி. கோயிலில் கறி சமைக்க கூடாது என பூசாரி சொல்ல கதிர் டென்ஷனாகிறான். நந்தினியின் அப்பா கதிரை சமாதானம் செய்து அழைத்து வருகிறார்.


 



வேனுக்கு பதிலாக டிராக்டர் வந்து நிற்கிறது. அதைப் பார்த்து நந்தினிக்கு ஒன்றும் புரியவில்லை. கார் ரிப்பேராக போனதால் வேற வழியில்லாமல் டிராக்டரை எடுத்து வந்ததாக டிரைவர் சொல்கிறார். நந்தினி அவளுடைய அப்பாவிடம் கோபித்துக் கொள்ள ஈஸ்வரி சமாதானமாகப் பேசி நாங்கள் அதிலே வருகிறோம் என சொல்கிறாள்.


அனைத்து விஷயங்களையும் சொதப்பலாக செய்ய கதிர் மாமனார் மீது கோபப்படுகிறான். "நான் என்ன நல்லது செய்தாலும் அது எல்லாமே தப்பாகவே போகுது. எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கங்க. நீங்க அது வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. இப்போ நான் உங்க காலில் விழுந்தா எல்லாம் சரியாக போய் விடுமா?" என சொல்லி காலில் விழ போகிறார். ஈஸ்வரியின் அப்பா அவரைத் தடுத்து விடுகிறார்.
அனைவரும் டிராக்டரில் ஏறி சந்தோஷமாக வந்து கொண்டிருக்க கரிகாலன் அவர்கள் பின்னாலேயே பைக்கில் வந்து கொண்டு இருக்கிறான். அவனைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.


அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 22 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


 



அனைவரும் கோயிலுக்கு டிராக்டரில் போவதைப் பார்த்த கரிகாலன் அவர்களின் வண்டியின் பின்னாலேயே வீடியோ எடுத்துக்கொண்டு போகிறான். அவனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "உங்க அப்பா ஏதோ ஃப்ளைட் அனுப்புவாருனு சொன்ன? இதுதான் உங்க ஊர்ல ஃப்ளைட்டா? " என நந்தினியை நக்கல் அடிக்கிறான் கரிகாலன். குணசேகரனிடம் இந்த கண்கொள்ளா காட்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக போனில் வீடியோ எடுக்கிறான். 





அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.