சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 16) எபிசோடில் ஜனனி வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து ஆபீஸிலும் குணசேகரன் போன்ற ஒரு கேரக்டர் இருப்பதாக சொல்ல அனைவரும் அதைக் கேட்டு சிரிக்கிறார்கள். அந்த சமயத்தில் கீழே இறங்கி வந்த குணசேகரன் "எங்க போனாலும் குணசேகரன் போல ஒருத்தன் இருப்பான்" என கர்வமாக சொல்கிறார். அவரின் குரலை கேட்டதும் ஜனனி போனை வைத்து விடுகிறாள்.

 

ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்திடம் இருந்து போன் வருகிறது. உடனே அவர் சொல்லும் இடத்துக்கு வர சொல்கிறார். ஜீவானந்தம் மற்றும் தர்ஷினி ஈஸ்வரிக்காக காத்திருக்கிறார்கள். தர்ஷினியின் மேட்ச் சம்பந்தமாக கவுன்சிலிடம் பேசியதில் அவள் இத்தனை பிரச்சினைகளை சந்தித்து திரும்பியுள்ளதால் மனதளவில் அவள் பாதிக்கப்பட்டு இருப்பாள். அதனால் அவள் கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்ட பிறகு நேரடியாக பைனல் மேட்சில் கலந்து கொள்ளட்டும் என சொல்லி விட்டார்கள் என்று சொல்லி தர்ஷினியை ஈஸ்வரியின் அனுப்பி வைக்கிறார் ஜீவானந்தம்.   காதுகுத்து விழாவுக்கான பத்திரிகையை மீனாட்சி அம்மனிடம் வைத்து அழைப்பிதழ்களை சொந்தபந்தங்களுக்கு வைக்க கிளம்புகிறார்கள். நந்தினியின் சித்தப்பா வீட்டுக்குச் சென்ற இடத்தில் மொய் விருது வைப்பதன் காரணம் பற்றி அவர் விசாரிக்கிறார். பத்திரிகையை வாங்கிப் பார்த்ததும் அதில் குணசேகரன் பெயர் இல்லை என பார்க்கிறார். நந்தினி எவ்வளவு சமாளித்தும் குணசேகரன் தானே உங்கள் வீட்டின் விலாசம் அவர் பெயர் இல்லை என்றால் உங்களுக்கு ஏதாவது வருத்தமா? எனக் கேட்க கடுப்பான கதிர் நந்தினியின் சித்தப்பாவை கத்திவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான கதைக்களம் .

 

பத்திரிகை வைத்து விட்டு வீட்டுக்கு வந்த நந்தினியையும் மற்றவர்களையும் முறைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் குணசேகரன். அவருக்கு போன் ஒன்று வருகிறது. அதில் காதுகுத்து பத்திரிகையில் குணசேகரன் பெயர் இல்லாதது பற்றி விசாரிக்கிறார்கள். குணசேகரன் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தை தாங்கிக் கொள்ள முடியாத நந்தினி குணசேகரனிடன் இருந்து போனைப் பிடுங்கி " யோவ். இப்போ சொல்றேன் கேட்டுக்க. இந்த காதுகுத்துக்கும் திரு. குணசேகரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வைய்யா போனை" என வைத்துவிடுகிறாள். அதைப் பார்த்த குணசேகரன் கொந்தளிக்கிறார். 
 
 
 

பிரச்சினை பெருசாக விசாலாட்சி அம்மாவிடம் "ஆதிமுத்து ஐயா தான் அவங்களும் அப்பன். கேட்டா கோவம் வருது இல்ல. அந்தக் கோபத்தில் கொஞ்சத்தை உங்க மூத்தப் பிள்ளை கிட்ட காட்டுங்க" என ரேணுகா சொல்ல விசாலாட்சி அம்மா டென்ஷானாகிறார். 
 
ஈஸ்வரி தர்ஷினியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறாள். அவர்கள் வருவதைப் பார்த்த கரிகாலன் "இந்த புஸ்வானத்தை விடுங்க. பின்னாடி பாருங்க ஆட்டம் பாம்மே வந்து நிக்குது" என தர்ஷினியைப் பார்த்து சொல்ல குணசேகரன் திரும்பிப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.