Ethirneechal : அப்பத்தாவின் அதிரடி என்ட்ரி! குணசேகரனுக்கு எதிராக வலுக்கும் சாட்சிகள்: விறுவிறுப்பான கதைக்களத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal : சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Continues below advertisement


Ethirneechal Written Update :  எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜூன் 6) எபிசோடில் குணசேகரன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். "குணசேகரன் சொல்லி தான் நான் ஜீவானந்தத்தை சுட போனேன் ஆனால் தெரியாமல் அவனுடைய பொண்டாட்டியை சுட்டு விட்டேன். அப்பவும் இந்த கதிர் அங்கே இருந்து வராமல் ஜீவானந்தத்தை சுட்டே தீருவேன் என நிக்குறான். அவனை இழுத்துட்டு வரதே பெரிய விஷயமா இருந்துச்சு" என்கிறார் கிள்ளிவளவன். தம்பியை பற்றி சொன்னதும் குணசேகரனுக்கு கோபம் வருகிறது.

அடுத்ததாக ஆதிரையை விசாரிக்கிறார்கள். ஆதிரை நடந்த அத்தனை விஷயங்களை பற்றி குணசேகரன் என்னென்ன கொடுமை எல்லாம் செய்து இருக்கிறார் என்பதை சொல்லியும் அழுகிறாள். அவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க சொல்லி நீதிபதியிடம் கெஞ்சுகிறாள்.

Continues below advertisement

 



அடுத்ததாக தர்ஷினியை கடத்தி வைத்திருந்த குதிரையை விசாரிக்கிறார்கள். வீரசங்கிலி சொல்லி தான் தர்ஷினியை கடத்தினேன் என உண்மையை சொல்கிறான். வீரசங்கிலியை விசாரிக்கும் போது அவனும் குணசேகரன் டீல் பேசியது பற்றியும் பின்னர் போலீசில் மாட்டிக் கொண்ட பிறகு அப்படியே மாற்றி பேசியது பற்றியும் சொல்கிறான். அடுத்ததாக ஈஸ்வரி விசாரிக்க அழைக்கப்படுகிறாள். எதிர் தரப்பு வக்கீல் அவளை ஜீவானந்தத்துடன் சேர்த்து வைத்து அசிங்கப்படுத்தி பேசுகிறார். அதை கேட்டு கொந்தளித்த ஈஸ்வரி இது போன்ற ஆணாதிக்கவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்புகிறாள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்று ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது ரேணுகாவை விசாரிக்கையில் "எங்க கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு தீர்வு குடுங்க. இந்த ஆளை மட்டும் விட்டுராதீங்க" என அவர் செய்த கொடுமைகளை எல்லாம் அழுதுகொண்டே கொட்டுகிறாள். நந்தினி பேசுகையில் "இவருக்கு எதிரா நீ பேசினா உன்னோட பிள்ளையை பாக்க முடியாது என காலையில வரைக்கும் மிரட்டிக்கிட்டு இருந்தாங்க" என உண்மையை சொல்கிறாள்.

 

 

ஜனனி அப்பத்தாவை பிளான் பண்ணி கொன்றதை பற்றி மனம் வருந்தி சொல்கிறாள். அந்த நேரத்தில் அப்பத்தா கோர்ட்டில் என்ட்ரி கொடுக்கிறார். கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட அப்பத்தா திரும்பி வந்ததை பார்த்து குணசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

 



மிகவும் விறுவிறுப்பாக எதிர்நீச்சல் சீரியலின் இறுதி பகுதி வாரத்திற்கான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்பத்தாவின் என்ட்ரி அனைவரையும் உலுக்கி இருக்கும் நிலையில் அவர் வந்து என்ன சொல்ல போகிறார் என்பதை அடுத்த எபிசோடில் தெரியவரும்.

Continues below advertisement