வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை ரசிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடரில் நடிக்கும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் அந்த கதாபாத்திரங்களாகவே ஆழமாக பதிந்து விடுகிறார்கள். அப்படி துணிச்சலான ஒரு பெண்மணியாக ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் அவர்களுக்கு சவால் விடும் ஒரு பெண்ணாக ரசிகர்களின் நெஞ்சங்களில் ஜனனியாக பதித்தவர் நடிகை மதுமிதா. 



பெங்களூருவை சேர்ந்த மதுமிதா கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியலில் முதலில் அறிமுகமானதே சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' தொடரில்தான். அறிமுகமான முதல் தொடரிலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாக திகழும் மதுமிதாவுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 


எதிர் நீச்சல் தொடரில் படித்த பட்டதாரி பெண்களை வீட்டிற்கு மருமகள்களாக அழைத்து வந்து அடிமைகளாக வைத்து இருக்கும் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு கதாபாத்திரமான ஆதி குணசேகரனை மிகவும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ஜனனி என்ற கதாபாத்திரமாக வெகு சிறப்பாக நடித்து வருகிறார் நடிகை மதுமிதா. 


நடிகை மதுமிதா புதிதாக கியா கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்துடன் சென்று ஷோரூமில் இருந்து காரை பெற்று கொள்வது,  குழந்தையின் காலடி தடத்தை பதிப்பது, பூஜை போடுவது என தனது வாழ்க்கையின் மிகவும் சந்தோஷமான தருணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். "இந்த கார் என்னுடைய கனவு அல்ல... அதை உருவாக்கினேன். என்னுடைய முதல் பெரிய குழந்தையை வாங்கியாச்சு. என்றுமே என்னுடைய சப்போர்ட்டாக இருந்த அனைவருக்கும் நன்றி" என பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.  






சமீபகாலமாக சின்னத்திரை நட்சத்திரங்கள் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி அதன் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் கேபி, ரச்சிதா மஹாலக்ஷ்மி, சுனிதா என அவர்களின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் எதிர்நீச்சல் மதுமிதா.