Ethirneechal Sep 15 promo : கண்ணு தெரியாமதான் ஹனிமூன் போகணும்.. கரிகாலனை ஓடவிட்ட விசாலாட்சி... எதிர் நீச்சலில் இன்று 

Ethir neechal September 15 promo :*கரிகாலனை கலாய்த்து ஓட விட்ட விசாலாட்சி* ஜீவானந்தம் வெண்பாவை சந்தித்த ஈஸ்வரி* அம்மாவை நினைத்து வேதனை படும் வெண்பாஇன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகாவை நிறுத்தி வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறான் ஞானம். அவனை மேலும் தூண்டி விடுகிறான் கரிகாலன். ஒருவழியாக அந்த பிள்ளைகளுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது என டீச்சர் சொல்ல அடங்கிவிடுகிறான் ஞானம். 

Continues below advertisement

"இது போன்ற பிறவி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு டச் தெரபி மூலம் டான்ஸ் கற்றுக்கொடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என வரச்சொன்னேன்" என்கிறாள் ரேணுகா. அவளின் இந்த முயற்சியை பாரட்டுகிறாள் ஈஸ்வரி. 


ரேணுகாவுக்கு தர்ஷன் காலேஜில் இருந்து மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பதற்காக அழைப்பு வருகிறது. அவளை தர்ஷனுடன் அனுப்பி வைக்கிறாள் ரேணுகா. நந்தினி வீட்டுக்கு வந்ததும், நல்லபடியாக காண்ட்ராக்ட் கிடைத்த விஷயம், அம்மா வீட்டுக்கு சென்றது, வீட்டில் உள்ள அனைவருக்கும் கிஃப்ட் வாங்கி வந்தது என அனைத்தையும் பற்றி சந்தோஷமாக சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய எபிசோடில் நந்தினி மாமியார் விசாலாட்சி, ஆதிரையிடம் சமையல் ஆர்டர் கிடைத்துள்ள நல்ல விஷயத்தை பற்றி சொல்கிறாள். அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். பிறகு அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை கொடுக்கிறாள் நந்தினி. ஆதிரை நந்தினியை கட்டியணைத்து அவளுக்கு வாழ்த்துக்களை சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து கரிகாலன் அங்கே வருகிறான். 

அவர்களை குறுகுறுவென பார்த்தபடி வரும் கரிகாலனிடம் விசாலாட்சி அம்மா "என்னடா பாக்குற?" என்கிறார். "பொம்பளைங்க சமைச்ச பிரசாதம்" அப்படின்னு பேசிகிட்டு இருந்தீங்களே அதுதான்" என கரிகாலன் கேட்க "அதெல்லாம் பார்த்தா கண்ணு தெரியாத கபோதியா ஆயிடுவ, அப்புறம் ஊருக்கு போகணும் என நினைச்சா கண்ணு தெரியாமத்தான் போகணும்" என கிண்டலாக சொல்ல "ஹனிமூனுக்கு கண்ணு தான் முக்கியம்" என சொல்லி நழுவுகிறான். 

 


மறுபக்கம் தர்ஷனுடன் சென்ற ஈஸ்வரி, அங்கே ஜீவானந்தத்தையும் அவரின் மகள் வெண்பாவையும் ஒரு டீ ஷாப்பில் பார்க்கிறாள். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது "வெண்பா கஷ்டப்படுறதுக்கு நான்தான் காரணம்" என்கிறார் ஜீவானந்தம். அதற்கு வெண்பா "நீங்க என்ன நல்லாதான் பாத்துக்குறீங்க...ஆனா அம்மா நம்ம கூட இருந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்" என வருத்தத்துடன் சொல்கிறாள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

Continues below advertisement
Sponsored Links by Taboola