Ethir Neechal July 22 Promo: குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்ட குணசேகரன்...கௌதமை பார்த்து ஷாக்கான ஜனனி... இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ! 

*ஜீவானந்தம் டீமில் கௌதமை பார்த்து ஷாக்கான ஜனனி* குண்டுக்கட்டாக குணசேகரனை தூக்கி சென்ற அடியாட்கள்

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் பெரிய பூகம்பமே வெடித்தது. இது வரையில் அனைவரையும் ஆட்டிவைத்த குணசேகரன் நேற்றைய எபிசோடில் வெலவெலத்து போனார். எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் இதுவரையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் இது தான். 

Continues below advertisement

நேற்றைய எபிசோடில் குணசேகரனையே அடக்கி விட்டார் ஜீவானந்தம். வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஆரம்பிக்க, பொறுமையை இழந்த ஜீவானந்தம் துப்பாக்கியை எடுத்து சுடவும் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள். "இனிமேல் இது எங்களுடைய சொத்து. அமைதியா இருந்தால் மிஞ்சிய சொத்து என்ன என்பதை தெரிந்து கொள்வாய். இல்லை என்றால் தெரியாமலே செத்துப் போ" என சொல்லி குணசேகரனுக்கு யோசிக்க ஒரு  பத்து நிமிடம் அவகாசம் கொடுத்தார் ஜீவானந்தம். 

 

வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஜனனியை நினைத்து கவலைப்படுகிறார்கள். “குணசேகரனிடம் தனியாக மாட்டிக்கொண்டு அவள் என்ன பாடுபடுகிறாளோ” என கவலைப்படுகிறார்கள். பொறுமையாக இருக்க சொல்லி ஈஸ்வரி சொல்கிறாள்.   

குணசேகரன் இதற்கெல்லாம் மசிய மாட்டார் என நினைத்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக்காக ஜீவானந்தம் கொடுத்த பத்து நிமிடத்திற்கு பிறகு ஜீவானந்தத்தை பார்க்க செல்கிறார் குணசேகரன். “என்னுடைய சொத்தில் எனக்கு என்ன பங்கு இருக்கு என்று அவன் சொல்வானாம்...” என உடைந்து போய் பேசுகிறார் குணசேகரன். இருப்பினும் அவர்களுக்கு ஜனனி  மீது தான் சந்தேகம்.  ஜனனியை வீணாக வம்புக்கு இழுக்க கதிருக்கும் சக்திக்கும் சண்டை ஏற்படுகிறது அந்த நேரத்தில் ஜீவானந்தம் வருகிறார் அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் கெளதம் மிகவும் கெத்தாக என்ட்ரி கொடுக்கிறான். அதை சற்றும் எதிர்பார்க்காத ஜனனி, “நீ இங்க என்ன பண்ணற? உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் குழம்பி போய் கேட்கிறாள் ஜனனி. அதற்கு  கௌதம்  “40% சொத்தின் உரிமையாளர்கள் நாங்கள் தான்” என்றதும், குணசேகரன் “அதுல வீடு ஒன்னு இருக்கு” என்றதும், “அதுவும் லிஸ்ட்ல இருக்கு” என நக்கலாக சொல்கிறான் கௌதம்.

அதைல் கேட்டு கடுப்பான குணசேகரன், “உங்களால ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது டா” என சவால் விடுகிறார். அடியாட்களுக்கு ஜீவானந்தம் சிக்னல் கொடுக்க குணசேகரனை குண்டுகாட்டாக தூக்கிக்கொண்டு செல்கிறார்கள் அடியாட்கள். கதிர், ஞானம் என அனைவரும் தடுக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது  தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட். 

 

z

அடுத்தடுத்து எதிர்நீச்சலில் ஸ்வாரஸ்யம் தான். நெஸ்ட் என்ன என்பது ரசிகர்களின் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது!

Continues below advertisement
Sponsored Links by Taboola