சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியின் ஸ்கூலுக்கு சென்ற ஈஸ்வரி அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சிறிது நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருக்கிறாள். "ரொம்ப மோசமான ஆள் தான் அப்பா. செத்துருன்னு சொல்லறாரு. நான் ஏன் அம்மா சாகணும். அப்பா மாதிரி மோசமானவங்க எல்லாம் மத்தவங்களுக்கு இம்சை கொடுத்து வாழும் போது நான் ஏன் சாகணும்' என விரக்தியில் பேசுகிறாள் தர்ஷினி. நம்மளோட தன்னம்பிக்கையை உடைத்து அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் இருப்பதற்காக செய்றது தான் இது எல்லாமே. அதனால நீ மனசு உடைஞ்சு போகாம உன்னோட குறிக்கோளை நோக்கி ஸ்ட்ராங்கா அடியெடுத்து வை. நான் உனக்கு சப்போர்ட்டாக என்றுமே இருப்பேன்" என தன்னம்பிக்கை கொடுக்கிறாள் ஈஸ்வரி. "உன்னை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. நீ நல்ல விளையாடுவ என எனக்கு தெரியும் ஆனால் முதல் தடவை அதை நேரில் பார்க்கும் போது அப்படியே புல்லரிச்சு போயிடுச்சு" என மகளை பார்த்து பூரிக்கிறாள்.
ஐஸ்வர்யா ஸ்கூலில் இருந்து வெகு தூரமாக நடந்து வருகிறாள். மறுபக்கம் தர்ஷினியும் ஈஸ்வரியும் ஆட்டோவில் வருகிறார்கள். வழியில் ஐஸ்வர்யாவை பார்த்து ஆட்டோவில் எற சொல்கிறார்கள் ஆனால் ஐஸ்வர்யா "இல்ல வேண்டாம் பெரியம்மா வீடு பக்கத்துல வந்துடுச்சு நான் நடந்தே வரேன் " என சொல்லிவிடுகிறாள். பிறகு மூவரும் பேசிக்கொண்டே நடந்து வருகிறார்கள். "இன்று நிறைய புது மனிதர்களை சந்தித்தேன், இப்படி நடந்து வருவதால் வைட்டமின் சத்து கிடைக்கிறது. எளிமையாக வாழ்வதால் பல நன்மைகள் இருக்கிறது இல்ல பெரியம்மா" என ஐஸ்வர்யா சொல்ல அதை கேட்டு சந்தோஷப்படுகிறாள் ஈஸ்வரி.
தாரா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸ்கூலில் டீச்சரை அவள் எப்படி நடித்து சமாளித்தாள் என்பதை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவள் பேசுவதை பார்த்து அனைவரும் சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் நந்தினி கதிரை பயங்கரமாக திட்டுகிறாள். "யாராவது அந்த ஆள் கை காலை உடைச்சா அவங்களுக்கு நான் கோயில் கட்டுவேன்" என வேடிக்கையாக சொன்னாலும் அதில் வெறுப்பு தெரிந்தது. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கல்வெட்டு வைப்பது பற்றி சிரித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.