சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டுக்கு வகைவகையாக சமைத்து வந்து விருந்து பரிமாறுகிறாள். ஆஹா ஓஹோ என ஜான்சியை பாராட்டி குணசேகரன் சாப்பிட, சாப்பாட்டையே  காணாதவன் போல வழித்து துடைத்து சாப்பிடுகிறான் கரிகாலன். பல நாட்களுக்கு பிறகு நல்ல சாப்பாடு போட்டதற்கு ஜான்சிக்கு நன்றி கூறிய குணசேகரன் உன் கைப்பக்குவம் பிரமாதம் என பாராட்டுகிறார்.



பிறகு ஜான்சி ராணி தான் கிளம்புவதாக கூறி கரிகாலனையும் ஆதிரையையும் அழைக்கிறாள். ஆதிரை, அம்மா வந்தவுடன் பார்த்துவிட்டு செல்வதாக கூறுகிறாள் ஆனால் குணசேகரன் மறுவீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் ஆனது அதனால் நீயும் கிளம்பு என துரத்துகிறார். உனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் நான் செய்து தருகிறேன் என ஆதிரையிடம், ஜான்சி ராணி கூறுகிறாள். ஆதிரை உடனே கரிகாலனை வைத்து ஜான்சி ராணியிடம் நாங்கள் அத்தை வரும் வரைக்கும் இருந்து பார்த்து விட்டு பிறகு வருகிறோம் என சொல்லி போக சொல்கிறான். 


சக்தியும், ஜனனியும் கௌதமை சந்திக்கிறார்கள். போட்டோவில் இருந்த நபர் பற்றி ஏதாவது விவரம் தெரிந்ததா? குணசேகரன் அனுப்பிய நபர் தானே என கௌதமிடம் ஜனனி கேட்க, இனிமேல் உங்க அப்பத்தா சொத்தில் தலையிடுவதை விட்டுவிட்டு உங்க பிசினஸில் கவனம் செலுத்து என சொல்கிறான் கௌதம்.


இதை சற்றும் எதிர்பார்க்காத ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவன் என்ன அவ்வளவு பெரிய ரவுடியா? அவனால் நமக்கு ஆபத்து இருக்கிறதா? என ஜனனி கேட்கிறாள். இது பெரிய அளவில் வெடிக்க போகுது அதனால் நீ அதிலிருந்து ஒதுங்கி விடு அதுதான் உனக்கு நல்லது. என்கிறான். உனக்கு அவன் யார் என்பது தெரியுமா? தெரிந்து தான் இதை சொல்கிறாயா என மீண்டும் ஜனனி அதையே கேட்க, யார் என்பது எல்லாம் தெரியாது ஆனால் இதில் தலையிட்டால் வெளிவர முடியாத அளவுக்கு பெரிய சிக்கல்கள் வரும் என்கிறான். உன்னால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இது அப்பத்தாவின் உரிமை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறாள் ஜனனி. இவர்கள் மூவரும் பேசியதை யாரோ ஒருவன் கண்காணித்து கொண்டு இருக்கிறான். 


 



ரேணுகா ஞானத்திடம் வந்து ஐஸ்வர்யா நாளை முதல் வேறு ஒரு ஸ்கூலுக்கு போக போவது பற்றி சொல்கிறாள். எதுவும் பேசாமல் இருந்த ஞானத்தை பார்த்து தன்மானத்தோடு இருக்க சொல்லி ஒரு மனைவி சொல்வது அத்தனை பெரிய குத்தமா என சண்டையிடுகிறாள். அவர்களுடன் சண்டை பெரிதாக ஞானம் கையை ஓங்க கதிர் வந்து தடுக்கிறான். குணசேகரன் தம்பிகள் என்ற ஒன்றுக்காக தான் உங்களை இந்த ஊரில் மதிக்கிறார்கள் இல்லை என்றால் நீங்கள் மண்ணோடு மண்ணாக போய்விடுவீர்கள், ஒரு நாய் கூட உங்களை மதிக்காது என புலம்பி விட்டு செல்கிறாள்.


ஞானத்தை பார்த்து கதிர், இப்படியே பேசவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டே இரு. ஒரு நாள் விபூதி பட்டை போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். நாலு சாத்து சாத்தவேண்டியது தானே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தால் எனக்கே அசிங்கமா இருக்கிறது என கத்திவிட்டு அவனும் சென்று விடுகிறான். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.