சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் நேற்றைய எபிசோடில் ஆதிரையை வலுக்கட்டாயமாக முதலிரவுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் ஆதிரை சம்மதம் தெரிவிப்பதுபோல சொல்லிவிட்டு உள்ளே சென்றதும் கரிகாலனை குழப்பி விடுகிறாள். அருணை தான் நான் காதலிக்கிறேன், அவனுடன் தான் நான் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன் அதனால் நீ மரியாதையாக ஒதுங்கி கொள் என்கிறாள். அத்துடன் முதல்நாள் எபிசோட் முடிவுக்கு வந்தது. 



அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் "என் வாழ்க்கையே நாசமா போனதே. எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதோ கொஞ்சம் சிடுமூஞ்சி, சிடுசிடுன்னு பேசுவ, கோவக்காரி ஆனா நல்ல மனசு அப்படினு தானே நினைச்சேன். இப்படி ஏமாத்திட்டியே ஆதிரை" என அழுகிறான் கரிகாலன். "இதை போய் வெளியில யார்கிட்டயாவது சொன்ன உன்ன கொன்னுடுவேன்" என மிரட்டுகிறாள். "ரெஜிஸ்டர் ஆபிசில் நான் போட்டது என்னோட கையெழுத்தே இல்லை. ஒரு கம்பளைண்ட் கொடுத்தா இந்த கல்யாணம் செல்லாது என நோட்டீஸ் ஒட்டிவிடுவார்கள். நான் சொல்வதை தான் நீ கேட்கவேண்டும். வெளியில யாரவது முதலிரவு நல்லபடியா நடந்துச்சா என கேட்டா  எல்லாம் நல்லபடியா நடந்துச்சு என்று சொல்லணும்" என மிரட்டிவிடுகிறாள். 




நந்தினி, ஈஸ்வரி மற்றும் ரேணுகா மூவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஆதிரை மனதில் ஏதோ திட்டத்துடன் தான் இதற்கு சம்மதித்து இருக்கிறாள். ஆதி குணசேகரன் குடும்பத்து ரத்தம் தானே அவள் உடலிலும்  ஓடுகிறது ஆனால் என்ன டோஸேஜ் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது அது தான். அருணுடன் சேர்த்து வைக்க வேண்டும் என நம்ம எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் ஆனால் அருண் வரவில்லை என்றதும் என்னென்ன பேச்சு பேசினாள். நம்ம மேலே என்ன தப்பு இருத்தது. அதை அவள் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு செய்தாள்" என ரேணுகா சொல்கிறாள். 


இது எல்லாம் சரி தான் ஆனால் நம்மளை விட்டு வைப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருப்பதாக குணசேகரன் கூறினார் அது என்னவாக இருக்கும் என குழப்பத்தில் மூவரும் பேசிக்கொள்கிறார்கள். ஜனனிக்கு அது எதற்காக இருக்கும் என ஏதாவது தெரிந்து இருக்கும் என அவளை அழைத்து வரச் சொல்கிறார்கள். அப்போது அங்கே வந்த ஜனனி, "அப்பத்தா சொத்துல குணசேகரன் ஏதோ பிளான் வைச்சு இருக்கார். மொத்தமா சுருட்ட போறாரு. இன்னும் இரண்டு நாளில் பூகம்பம் வெடிக்க போகுது. அது யாருக்கு சாதகமாக இருக்கும் என தெரியவில்லை". நம்ம மண்டபத்துல இருக்கும்போது பெரிய சதி வேலை செய்து இருக்கார் என சொல்லி சிசிடிவி புட்டேஜில் இருந்த ஜீவானந்தம் போட்டோவை அவர்களிடத்தில் காட்டுகிறாள். அவர் குணசேகரன் அனுப்பியவர் என நினைத்து கொண்டு அவர் மூலமாக அனைத்து விஷயங்களையும் வெளியே கொண்டு வருகிறேன் என சபதமிடுகிறாள்.


கரிகாலன் ஜான்சி ராணிக்கு போன் செய்து பேசுகிறான். குணசேகரன் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறான். ஆனால் ஆதிரை பேசியதை பற்றி எதுவும் சொல்லமால் மறைத்துவிடுகிறான். அடுத்த நாள் காலை வழக்கம் போல பிரச்னையை ஆரம்பித்த குணசேகரன் இன்னைக்காவது மாப்பிள்ளைக்கு விருந்து சமைத்து போட வேண்டும் என அதற்கான வேலைகளை செய்ய சொல்கிறார். அந்த நேரம் பார்த்து வாய் நிறைய பல்லோடு சிறிது கொண்டே நுழைகிறாள் ஜான்சி ராணி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.