சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் செய்யும் தில்லாலங்கடி வேலையை மிகச் சரியாகக் கணித்து அதை அப்படியே நேரில் பார்த்தது போல புட்டு புட்டு வைத்த கரிகாலனை அதட்டியே அடக்கிவிடுகிறான் கதிர். 


கிள்ளிவளவன் கொடுத்த தகவல் :


கிள்ளிவளவன் கதிருக்கு போன் செய்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள பசங்க கிட்ட சொல்லி விட்டதாகவும், அதற்காக அனைத்தும் தயார் செய்து கொண்டு இருப்பதாகவும் சொல்லி விரைவில் அங்கு வந்து விடுவோம் என்ற தகவலையும் சொல்கிறார். வெவ்வேறு நம்பரில் இருந்து தான் போன் செய்வேன் என்றும் அடிக்கடி எனக்கு நீங்கள் போன் மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறுகிறார். இந்தத் தகவலை குணசேகரனிடம் தெரிவிக்க சொல்கிறார்.


 



டான்ஸ் டீச்சரான ரேணுகா :


ரேணுகாவுக்கு சீதாராமன் டான்ஸ் அகாடமியில் டீச்சராக சேர அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துள்ளது. அதை ஜனனி சர்ப்ரைஸாக ரேணுகாவிடம் கொடுக்க, நந்தினி, ஐஸ்வர்யா, ஜனனி என அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். 


வக்கீல் வந்த காரணம் :


குணசேகரனை பார்ப்பதற்காக ஆடிட்டர் வக்கீல் ஒருவரை உடன் அழைத்து வந்துள்ளார். அவர்கள் அனைவரும் தீவிரமாக எதையோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கூடி கூடி அப்படி என்ன தான் பேசுவார்கள் என நந்தினியும் ரேணுகாவும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


இன்றைய எபிசோடில் ஆடிட்டர் உடன் வந்து இருக்கும் வக்கீல் "ஜீவானந்தம் பண்ண ரெஜிஸ்ட்ரேக்ஷனை தப்பு என ப்ரூவ் பண்ண வேண்டும்" என குணசேகரனிடம் சொல்கிறார். "எப்படி பண்ண வேண்டும் என சொல்ல மாட்டேங்குறீங்க" என்கிறார் குணசேகரன். கரிகாலன் வாய் சும்மா இல்லாமல் "தெரிஞ்சா சொல்ல மாட்டாரா..."என்றதும் அனைவரும் அவனை முறைக்கிறார்கள்.


 



ஜனனியின் அடுத்த மூவ் :


கீழே சமையலறையில் "குணசேகரனால ஜீவானந்தத்தை மீட் பண்ணாமல் எதுவும் நடக்காது" என ரேணுகாவிடமும் நந்தினியிடமும் சொல்கிறாள் ஜனனி. "சக்தி டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்ததும் நான் ஜீவானந்தத்தை போய் பார்க்கப் போகிறேன்" என்கிறாள் ஜனனி. இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 




ரசிகர்களின் எதிர்பார்ப்பு :


கவுஞ்சி சென்றுள்ள சக்தி, ஜீவானந்தம் பற்றி ஏதாவது தகவல் சேகரித்து வருவான் என மிகவும் நம்பிக்கையாக இருக்கும். ஜனனிக்கு வேண்டிய தகவல் கிடைக்குமா? குணசேகரன் அடுத்த கட்ட மூவ் என்ன? ஜீவானந்தத்தைக் கொல்ல திட்டம் தீட்டும் கிள்ளிவளவன் பிளான் என்னவாகும்? இனி வரும் எதிர் நீச்சல் எபிசோட்களில் இதற்கான விடை தெரிய வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.