Ethirneechal August 16 Promo : வளவன் வலையில் சிக்குவாரா ஜீவானந்தம்? புதிய ட்விஸ்டுடன் பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ 

Ethir neechal : ஜீவானந்தத்திற்கு வலை விரித்து போட்டுத்தள்ள காத்துகொண்டு இருக்கும் கதிர், அவரை சந்திக்க காத்திருக்கும் ஜனனி மறுபக்கம். பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில், ஊர்ப் பெரியவர் வீட்டில் தங்கிய ஜனனியிடம் பெரியவரும் அவரது மனைவியும் ஜீவானந்தத்தை பற்றியும் அவரின் மனைவி, மகள் பற்றியும் கூறுகிறார்கள். அவருடைய குடும்பமே மிக பெரிய வள்ளல் என அவர்கள் சொன்னதும் குழப்பமாக இருக்கிறாள் ஜனனி. 

Continues below advertisement

நந்தினி, குணசேகரன் பேசியதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு அழுகிறாள். அவளுக்கு ரேணுகா ஆறுதல் கூறி கொண்டு இருக்கிறாள். குணசேகரனிடம் ஞானம் சென்று அவர் செய்தது தப்பு என சொல்கிறான். கரிகாலன் குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறான். "கதிரை எங்கோ அனுப்பி இருக்கீங்க அதை அம்மாவிடமோ அல்லது அவன் பொண்டாட்டியிடமோ சொல்லி இருக்கலாம் அல்லவா" என ஞானம் சொல்கிறான். "நான் கதிரை ஒரு வேலை விஷயமாக அனுப்பி இருக்கேன் அவன் வரும் போது பிணமாக கூட வரலாம்" என குணசேகரன் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நந்தினி வந்து எனக்கு "அவன் எங்க இருக்கான் என தெரியணும். அவன் இங்க வந்தாகணும். அவனை நான் திருத்தி காட்டுறேன்" என சண்டையிட்டு சவால் விடுகிறாள்.  

ஜீவானந்தம், கவுஞ்சிக்கு வருகிறார். மகள், மனைவி பற்றி பழைய நினைவுகளை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டே வருகிறார். வளவனும், கதிரும் ஜீவானந்தத்தை தேடி வருகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்ததது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

 

சக்திக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்தி குளிக்க வைக்கிறாள் ஈஸ்வரி. அதை வீட்டில் உள்ள அனைவரும் நின்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள். குணசேகரன் அங்கு வந்து "ஓஹோ கண்காட்சியா... வியாதி எல்லாம் நாம கொண்டாட கொண்டாடதான் ஒட்டிக்கொண்டே இருக்கும்" என சொல்ல  நந்தினி நக்கலாக "எல்லாரும் உங்களை மாதிரி இல்லையில மாமா. நாங்க மனுஷ பிறவி, தெய்வ பிறவி இல்ல" என சொல்லவும் ரேணுகாவும் ஆதிரையும் சிரித்துக் கொள்கிறார்கள். மொக்கை வாங்கியதால் குணசேகரன் முகம் சுருங்கி போகிறது.  

 

மறுபக்கம் ஜீவானந்தம் ஊரில் வந்து இறங்கி தன்னுடைய வீட்டுக்கு நடந்து செல்கிறார். கதிரும் வளவனும் அடியாட்களுடன் தயாராக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜனனியிடம் அந்த பெரியவர், "ஜீவானந்தம் மகளையும் மனைவியை பார்க்க இன்று வருகிறார். நான் உனக்கு வழி காட்டுகிறேன் நீ போயிடுறீயா மா" என கூறுகிறார். ஜனனி முதலில் தயங்கினாலும் பிறகு அந்த பெரியவருடன் செல்கிறாள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

ஜீவானந்தம், வளவிடம் சிக்குவாரா? கதிரின் திட்டம் நிறைவேறுமா? ஜனனியால் ஜீவானந்தத்தை சந்திக்க முடியுமா? இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக இருக்க போகிறது என்பதால் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola