சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் கரிகாலனிடம் மன்னிப்பு கேட்க முடியாது என குணசேகரனை எதிர்த்து பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள் தர்ஷினி. இதனால் கடுப்பான குணசேகரன் இது அனைத்துக்கும் காரணம் ஜனனி என அவளை வீட்டை விட்டு போக சொல்கிறார். கெளதம் ஜீவனந்தத்திடம், ஜனனி தன்னுடைய தோழி என்பதை சொல்லியதால் அவனிடம் கொடுக்கப்பட்ட பட்டம்மாள் சார்ந்த வேலைகளை தாங்களே பார்த்து கொள்வதாகவும் கெளதம் உடன் இருத்தால் போதும் என்றும் தெரிவித்துவிட்டார் ஜீவானந்தம். கரிகாலன் முதலிரவுக்கு தயாராக காத்து கொண்டு இருக்கிறான். ஆனால் இதற்கு சம்மதிக்காத ஆதிரை தயாராகாமல் இருக்கிறார்கள். ஆதிரை ரெடியாகி விட்டாளா என்பதை பார்ப்பதற்காக குணசேகரன் வருகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதன் சுருக்கமான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆதிரையை தயார் படுத்த சொல்லி ரேணுகா மற்றும் நந்தினியிடம் குணசேகரன் ஆர்டர் போட்டு இருந்தார். ஆனால் அவர்கள் அதற்கான எந்த வேலையையும் செய்யாமல் சமையல் அறையில் உட்கார்ந்து ஆதிரை திருமணம் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். "மூன்றாவது நபர் யாராவது இந்த கட்டாய திருமணம் பற்றி கேஸ் போட்டால் கூட இந்த கல்யாணம் செல்லாது" என்கிறாள் ஜனனி அதற்கு நந்தினி "அப்போ அதை நம்மளே செய்துவிடலாம்" என்கிறாள். "ஆதிரை என்ன முடிவில் இருக்கிறாள் என்பது நமக்கு தெரிய வேண்டும் இல்லையா" என ஜனனி  சொல்ல ஆதிரை "நான் முதலில் அருணை பார்க்கணும்" என்கிறாள். 


 



அவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது அங்கே குணசேகரன் வருகிறார். ஆதிரை தயாராகாமல் இருப்பதை பார்த்து டென்ஷனான குணசேகரன் "ஏய் நந்தினி இன்னும் ஏற்பாடு பண்ணலயா?" என மிரட்ட "அதெல்லாம் செய்ய முடியாது" என்கிறாள் நந்தினி. ஆசையாக இருந்த கரிகாலன் ஏமாற்றத்தில் "கல்யாணம் ஆன நாளில் இருந்து இவங்க இதையே தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க" என்கிறான். 


 



ஆதிரையை எப்படியாவது சமாதானப்படுத்தி சடங்குக்கு அனுப்பிவிட வேண்டும் என ஆதிரையிடம் குணசேகரன் பேச போக "இவன் எனக்கு வேண்டாம்" என கத்துகிறாள் ஆதிரை. பிறகு ஆத்திரத்தில்  அருவாமனையை கையில் எடுத்த ஆதிரையிடம் இருந்து அதை வாங்கி வைக்கிறார் ரேணுகா. இது தான் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ. 


ஆக மொத்தத்தில் குணசேகரன் பேச்சு அந்த வீட்டில் யாரிடமும் செல்லுபடியாகவில்லை. இனி என்னென்ன நடக்கப்போகிறது என்பதை  வரும் நாட்களில் பார்க்கலாம். 


சின்னத்திரை ரசிகர்களுக்கு குறிப்பாக எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு இன்பமான செய்தி என்னவென்றால் இனி இந்த சீரியல் வாரத்தின் ஏழு நாட்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என தகவலை ப்ரோமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.