பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


வம்பிழுக்கும் ராமமூர்த்தி 


கர்ப்பமாயிருக்கும் ஜெனியை செழியன் விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து ஈஸ்வரியும் பாக்யாவும் மகிழ்ச்சியடைவதோடு இந்த செய்தியை ராமமூர்த்திக்கும் சொல்கின்றனர். அப்போது தயாரிப்பாளர் மகள் வர்ஷினி பாக்யா வீட்டுக்கு வந்து ஜெனிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து எழிலை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தை குடும்பத்தினரோடு பழகி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி கொள்கிறார். இதனையடுத்து பாக்யா, ராமமூர்த்தி இருவரும் வாசலில் வந்த காய்கறி வண்டியில் வீட்டுக்கு தேவையானதை வாங்கி கொண்டிருக்கின்றனர். 


அப்போது கோபி, ராதிகா வெளியே போய்விட்டு வருகிறார்கள். அவர்களை பார்த்த ராமமூர்த்தி கோபியை வம்பிழுக்க நினைக்கிறார். உடனே காய்கறி கொண்டு வந்தவரிடம் நான் கொள்ளுத்தாத்தா ஆகப் போறேன். செழியன் அப்பா தாத்தாவாக போறான் என கத்தி சொல்கிறார். இதைக்கேட்டு ராதிகா முகம் வருந்துவதை கண்டு கோபத்தில் நடுரோடு என கூட பார்க்காமல் சண்டைக்கு செல்கிறார். ஆனால் ராதிகா சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.


கோபியை அடிக்கும் ராதிகா 


வீட்டுக்கு வரும் கோபி கத்தியை எடுத்து இன்னிக்கு ஏதாவது பண்ணப்போறேன்னு கிளம்புகிறார். அவரை மறிக்கும் ராதிகா நாம எதுக்கு இங்க வந்தோம் என கேட்க, நீதான அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்ன்னு சொன்ன என கோபி தெரிவிக்கிறார். ஆனால் இப்ப நாம எதுக்கு இங்க வந்தோம். எதுக்கு உங்களை கல்யாணம் பண்ணோம்ன்னு இருக்கு கடுப்பாக சொல்லிக்கொண்டே ரூமுக்குள் செல்கிறார். வெளியே கோபி நடப்பதை நினைத்து புலம்பி கொண்டிருக்க வெளியே வரும் ராதிகா பொம்மையை தூக்கி கோபியை அடிக்கிறார். இதனால் அவர் அதிர்ச்சியடைகிறார். 


மயூவை வெறுக்கும் இனியா 


இனியா ஸ்கூலில் அவர் உடன் படிக்கும் மாணவிகளிடம் கோபி திருமணம் செய்து கொண்டதையும், தன்னோட இடத்தில் மயூ இருப்பதையும் சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது அங்கு வரும் மயூ இனியாவிடம் ஏன் என்னோட பேச மாட்டேங்குறீங்க என கேட்க, யார் யாருக்கு அக்கா என அவளை கோபத்தில் தள்ளிவிட்டு செல்கிறார். வீட்டுக்கு வரும் மயூ நடந்தையெல்லாம் சொல்லி சொல்லி ராதிகாவிடம் வருத்தப்பட்ட, அவர் சமாதானம் செய்கிறார். பின்னர் அங்கு வரும் கோபி ராதிகாவின் முகம் வாடியிருப்பதை கண்டு என்னவென்று கேட்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.