பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமண நிகழ்ச்சி நடக்கப்போகும் நிலையில் மயூவை பாக்யாவை பார்க்கும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


மண்டபத்திற்குள் நடக்கும் திக் திக் காட்சிகள் 


ரிசப்ஷன் ஆரம்பிச்சிட்டா என பார்க்க செல்லும் பாக்யா மயூ நிற்பதை கவனிக்காமல் செல்கிறார். தொடர்ந்து கோபியும், ராதிகாவும் ரெடியாகிறார்கள். இதற்கிடையில் நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் பாக்யா குழுவினர் காபி மற்றும் ஜூஸ் கொடுத்து உபசரிக்கின்றனர். ஆனால் ராதிகாவின் அம்மா நிற்பதை பாக்யா பார்க்கவில்லை. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற எண்ணம் ரசிகர்களிடம் எழுகிறது. 


தொடர்ந்து உபரித்து கொண்டிருக்கும் போது பாக்யாவுக்கு சமையலறையில் அடுப்பை அணைத்து விட்டமா என்ற சந்தேகம் எழுகிறது. அவர் மேலே செல்ல முற்படும் போது ஓடிப்பிடித்து விளையாடும் மயூ பாக்யாவை இடித்துக் கொண்டு போகிறார். ஆனால் அது மயூ தான் என பாக்யா கவனிக்காமல் செல்கிறார். இப்படி பாக்யா - ராதிகா குடும்பத்தினர் சந்திக்காமலேயே காட்சிகள் நகர்கிறது. 


தொடர்ந்து சாப்பாடு பரிமாறும் வேளையில் செல்விக்கு பொண்ணு, மாப்பிள்ளை யார் என பார்க்கும் ஆசை ஏற்பட பால்கனியில் இருந்து எட்டிப் பார்க்கிறார். ஆனால் மணமேடையில் செல்ஃபி எடுப்பவர்கள் மாப்பிள்ளை, பொண்ணை மறைக்கின்றனர். அந்நேரம் அங்கு வரும் மண்டப மேனேஜர் சத்தம் போட்டு வேலைகளில் செல்வியை கவனம் செலுத்த சொல்கிறார். 


இதற்கிடையில் ராமமூர்த்தி ஆட்டோவில் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தை தேடி அலைகிறார். பின்னர் உள்ளே வரும் செல்வி பாக்யாவிடம் கல்யாண  பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு இருக்குதாம். இது ரெண்டாவது கல்யாணம். மாப்பிள்ளை பத்தி எனக்கு தெரியல என சொல்கிறார். ஆனால் பாக்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வேலை செய்கிறார்.


இதனையடுத்து மயூவுக்கு தொண்டை வலி காரணமாக பாட்டியிடம் வெந்நீர் கேட்க, அவர் மேலே சென்று கிச்சனில் வாங்கிக்க என தெரிவிக்கிறார். இதனையடுத்து மேலே செல்லும் அவர் சமையலறையில் இருக்கும் பாக்யாவை கண்டு ஆச்சரியமடைய, பதிலுக்கு பாக்யா அதிர்ச்சியடைகிறார். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.