பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் அம்மா, செழியன் - ஜெனி இருவரையும் தனது வீட்டில் இருவரையும் வந்து இருக்குமாறு சொல்லும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


ஜெனியின் அம்மா வந்ததை சொல்லிக்காட்டி பாக்யாவிடம் செழியன் எரிந்து விழுகிறார். ஈஸ்வரியிடமும் நீங்க அப்பாவை வெளியே போக விட்டிருக்க கூடாது. அவரை ஏதாவது சண்டைப் போட்டி தடுத்து நிறுத்தியிருக்கணும் என கூறுகிறார். உடனே பாக்யா டென்ஷனாகி நான் விவாகரத்து வாங்குனாங்கன்னு உன் மாமியார் கேட்டதுக்கே இப்படி கோபப்படுற..உங்க அப்பா பண்ணது தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க அதெல்லாம் யோசிக்க மாட்டியா என கேட்கிறார். இதனால் கோபமாகும் ஈஸ்வரி பாக்யாவை கண்டித்து விட்டு செழியனிடம் ஏதாவது சொல்லி ஜெனி அம்மாவை அனுப்பி வைக்குமாறு கூறுகிறார். 


கொளுத்திப் போடும் மரியம்


ரூமிற்குள் ஜெனி தனது அம்மா மரியத்தை திட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூறுகிறார். அங்கு வரும் செழியனிடம் நீங்க கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டு மாடில வீடு காலியா தான் இருக்கு அங்க வந்து இருங்க..இல்ல எவ்வளவு நாள் வேணாலும் இருங்க என கூற ஜெனி கடுப்பாகிறார். இந்த குடும்பத்தை ஒட்ட வைக்கிற பொறுப்பு எனக்கும், செழியனுக்கும் இருக்கு. அதனால இப்படி பேசிட்டு இருக்காதீங்க என சொல்ல, ஏற்கனவே எல்லா பொறுப்பையும்  தன் தலையில கட்டிருவாங்களோ என நினைக்கும் செழியன் அதிர்ச்சியடைகிறார். 


இதன்பின்னர் செல்வியிடம் பாக்யா நாளையில இருந்து ஆபீஸிற்கு போகணும்.இனிமேல் வீட்டை பார்த்துக்குற பொறுப்பு எல்லாம் நான் தான் கெத்தா சொல்லிட்டேன்.அதனால எல்லாம் பண்ணனும் என கூறுகிறார்.செல்வியும் எனக்கே எப்படிக்கா நீ டக்குன்னு சொல்லிட்ட..எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சி என சொல்கிறார். தெரில.எப்ப பார்த்தாலும் பணம் பணம் சொல்லிட்டே இருக்காரு. அதான் நானும் யோசிக்காம அப்படி சொல்லிட்டேன் என பாக்யா தெரிவிக்கிறார்.


 


பின்னர் வீட்டில் எழில், ஈஸ்வரி, பாக்யா, இனியா இருக்கும் போது வெளியே காரின் சத்தம் கேட்டு கோபி தான் வந்து விட்டதாக ஓடிப் போய் பார்க்கிறார். ஆனால் அது அவர் இல்லை என தெரிந்ததும் ஈஸ்வரியிடம் அழுது புலம்புகிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி ஆத்திரத்தில் பாக்யாவை திட்டிவிட்டு செல்கிறார். பின்னர் எழிலிடம் எனக்கும் கூட அவர் அந்த வீட்டுல இருக்க மாதிரி இருக்கு. இன்னிக்கு கூட அவருக்கும் சேர்த்து தான் சமைச்சேன் என தெரிவிக்க எழில் அதிர்ச்சியடைந்து அவருக்கு அறிவுரை வழங்குவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.