பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தான் வீட்டை விட்டு வெளியேற பாக்யாவுக்கு புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார்.


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


ஆத்திரமடைந்த கோபி


கோபி பாக்யாவின் சூட்கேஸை எடுத்து வாசலில் தூக்கி எறிய அதில் கோபி  ஆடைகள் இருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் மிரண்டு போகின்றனர்.  இதனைக் கண்ட மூர்த்தி சபாஷ் பாக்யா இன்னிக்கு தான் நீ என் மருமகள்ன்னு நிரூபிச்சிருக்க என பாராட்டுகிறார். இதனைக் கண்டு ஆத்திரமடையும் கோபி பாக்யாவுடன் சண்டைக்கு செல்கிறார். மூர்த்தி பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து கோபியை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். இப்படி இருக்கையில் விவாகரத்து பண்ணிவிட்டு இந்த வீட்டில் உனக்கென்ன வேலை என கோபி கேட்க பாக்யா கொந்தளிக்கிறார். 


சவால் விட்ட பாக்யா 


இதான் என் வீடு..நான் வாழ்ந்த வீடு... விவாகரத்து தான் ஆகிருக்கு. இனி உங்க கூட சேர்ந்து இருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்  ஏன் ரூம்ல நீங்க இருக்கக்கூடாது தான் உங்க டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தேன். நான் உங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்லல. ஆனால் நீங்க என்னோட சேர்ந்து ஒரே ரூம்ல இருக்க கூடாது என திட்டவட்டமாக கூறுகிறார். இதனால் பாக்யாவை ஈஸ்வரி கண்டிக்க அவரை மூர்த்தி அமைதியாக இருக்குமாறு கட்டளையிடுகிறார். 


நடப்பதையெல்லாம் பார்த்து இது என் சம்பளம் மூலம் வாங்குன வீடு..நீ வெளியே போ என சொல்ல பாக்யா கோபி திருமணம் ஆனது முதல் ஒருநாளாவது சந்தோஷமாக பேசியிருப்பீர்களா?..என தெரிவித்து கோபியை சரமாரியாக திட்டுகிறார். உடனே கோபி எல்லாரும் சேர்ந்து பிளான் போட்டிங்க போல.. நான் வீட்டை விட்டு செல்ல ரெடி. ஆனால் ஒரு கண்டிஷன். இந்த வீட்டைக் கட்ட நான் ரூ.40 லட்சம் செலவு பண்ணிருக்கேன். அந்த பணத்தை கொடுங்க நான் போறேன் என தெரிவிக்க குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். 






ஆனால் பாக்யா ரொம்ப கூலாக அந்த 40 லட்சம் பணத்தையும் நான் தருகிறேன் என கூறுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. பாக்யா எப்படி அந்த பணத்தை கொடுக்கப் போகிறார். கோபி வீட்டை விட்டு வெளியே போவாரா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண