பாக்கியலட்சுமி சீரியலில் கோபி-ராதிகா இடையே சண்டை வெடித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம்


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இக்கதை சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் என காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


வெடித்த சண்டை 


விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோபியின் மனைவியாக பாக்யா மேடையேறிய நிலையில் மிஸ்டர்.கோபி என அழைத்ததால் அவரது நண்பர் குழம்பி போகிறார். இதைக் கண்டு ராதிகா டென்ஷனாகி செல்கிறார். மறுநாள் ராமமூர்த்தி இரண்டு குடும்பத்தினரிடமும் பாக்யாவின் பேச்சு குறித்து பாராட்டி தள்ளுகிறார். இந்த பக்கம் டென்ஷனாகும் ராதிகா ரூமுக்குள் வரும் கோபியிடம் கடுமையாக சண்டையில் ஈடுபடுகிறார். 


உங்க குடும்பம் தான் அசிங்கப்படுத்துறாங்கன்னா, நீங்களும் அப்படித்தான் பண்றீங்க. உங்களை கல்யாணம் பண்ணுனதுக்கு தொடர்ந்து இன்சல்ட் பண்றாங்க. எல்லாமே உங்களுக்காக தான் நான் பொறுத்துகிட்டு இருந்தேன் என சொல்கிறார். ஆனால் இதெல்லாம் தனக்கு தெரிந்தா நடக்கு...இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கல என கோபியும் ராதிகாவிடம் எகிறுகிறார். சரி இன்னைக்கு பங்ஷன்ல என்னாச்சு.உங்க பொண்டாட்டின்னு பாக்கியலட்சுமி மேடை ஏறுறாங்க. நீங்க உங்க ப்ரெண்ட் கிட்ட சொல்ல வேண்டிதானே என ராதிகா கேட்க கோபி முழிக்கிறார். 


வேடிக்கை பார்க்கும் எழில் - மூர்த்தி 


அவன்கிட்ட நான் சொல்லல. எனக்கு சொல்லணும்ன்னு தோணல. இப்ப சொன்னாலும் அவனுக்கு புரியாது என கோபி பதில் பேச, அப்ப என்னை முதல்ல பங்ஷனுக்கு வர வேண்டாம்ன்னு சொன்னது எல்லாமே பாக்யா அங்க வரப்போறாங்கன்னு தெரிஞ்சதுனால தானே என ராதிகாவுக்கு சந்தேகம் மேல் சந்தேகம் எழுகிறது. உடனே கோபி நீ ரொம்ப டார்ச்சர் பண்ற. இப்ப உங்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது. நான் போறேன்னு சொல்லி வெளியே செல்கிறார். அப்படியே போங்க என ராதிகாவும் சொல்கிறார். 


இதற்கிடையில்  வெளியே நடக்கும் சண்டையை எழில்,மூர்த்தி இருவரும் வேடிக்கை பார்க்கின்றனர். இதனையடுத்து வழக்கம்போல பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஆட்டம் பாட்டம் என ஜாலியாக இருக்கின்றனர். இதனை தூரத்தில் இருந்து கோபி ஏக்கமாக வேடிக்கை பார்க்கிறார். அப்போது அங்கே வரும் ராமமூர்த்தி என்னோட எவ்வளவு சந்தோஷமா இருக்கு பாரு. ஏதோ நரகத்துல இருக்கேன்னு சொர்க்கத்துக்கு போறேன்னு சொன்னியே. இனிமேல் தான் எது நரகம்ன்னு உனக்கு தெரிய போகுது பாரு. அப்படி நடக்கலன்னா என் பேரை நான் மாத்திக்குறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். 


ஜீரோ மதிப்பெண் வாங்கும் கோபி 


அடுத்ததாக தம்பதியினர் எவ்வளவு தங்கள் இணைகளை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற போட்டி நடந்தது. அதில் தனம் - மூர்த்தி முழு மதிப்பெண் வாங்குகின்றனர். ராதிகா கோபி பற்றி புரிதலில் 5 மதிப்பெண்களும், கோபி ராதிகா பற்றிய புரிதலில் ஜீரோ மதிப்பெண்ணும் வாங்க அங்கிருப்பவர்கள் கிண்டல் செய்கின்றனர். இதனால் கடுப்பாகும் ராதிகா ஊருக்கு கிளம்ப தயாராகிறார். மறுபுறம் பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சுற்றுலாவில் விடைப் பெற்று செல்கின்றனர். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைந்தது.