விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகா ஏதோ ஒரு ஆபிஸ் பைலை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தால் கோபியிடம் சொல்லி எடுத்து வர சொல்கிறாள். கோபியும் அதை ராதிகாவின் ஆபிஸுக்கு கொண்டு வந்து கேன்டீன் வாசலில் இருந்து ராதிகாவுக்கு போன் மூலம் தகவல் சொல்கிறார். ராதிகா கோபியை "அங்கேயே இருங்க நான் வரேன்" என சொல்லி ராதிகாவும் கேன்டீனுக்கு வருகிறாள்.


 



கோபி கேன்டீனுக்குள் நுழைய அங்கே பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். "இங்கேயும் மீட் பண்ணி பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்களா? அவன் தான் வெட்கமே இல்லாம அலையறானா இவளுக்கு எங்க போச்சு அறிவு?" என திட்டி தீர்க்கிறார். 


கேன்டீன் கையை விட்டு போனதை நினைத்து மிகவும் மனவேதனையில் பழனிச்சாமியிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். "அவரோட வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை பார்த்து இருப்பார். நீங்க ஒரு தடவை அவருகிட்ட வாய்ப்பு கேட்டு பேசி பாருங்க" என பழனிச்சாமி கோடீஸ்வரன் சார் கிட்ட பேசி பார்க்க சொல்கிறார். "வாய்ப்பு குடுத்தாருன்னா சந்தோஷம் இல்லனா அதைவிட சந்தோஷம் என சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்" என்கிறார் பழனிச்சாமி.




ராதிகா கேன்டீனுக்கு வந்து பைலை வாங்கிக்கொண்டு நடந்த விஷயங்களை பற்றி கோபியிடம் சொல்கிறாள். கேன்டீன் பாக்கியா  கையை விட்டு போக போவதை தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்படுகிறார் கோபி. 


பழனிச்சாமி கொடுத்த தைரியத்தில் கோடீஸ்வரன் சாரிடம் போய் பேசுவதற்காக பாக்கியா வருகிறாள். அந்த நேரத்தில் கோபி கேன்டீனில் இருப்பதை பார்த்து  பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். பழனிச்சாமி "கவலை படாதீங்க மேடம் நீங்க போய் தைரியமா பேசிட்டு வாங்க..." என சொல்கிறார். 


பின்னாடியே ராதிகாவும் "நானும் போய் கோடீஸ்வரன் சாரை எப்படியாவது இந்த கேன்டீன் அவங்களுக்கு திரும்பவும் கிடைக்க விடாத மாதிரி பண்ணிட்டு வரேன்" என சொல்ல கோபியும் "போ போ போய் நல்லா சொல்லிட்டு வா, அவளுக்கு இந்த கேன்டீன் இனிமே கிடைக்கவே கூடாது" என அவளை அனுப்பி வைக்கிறார். 


பாக்கியா கோடீஸ்வரன் சாரை பார்த்து பேசி மன்னிப்பு கேட்டு ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என ரெக்வஸ்ட் செய்து கொண்டு இருக்க ராதிகா "அதெல்லாம் முடியாது. நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த டார்கெட்டை முடித்தோம். எல்லார் முன்னாடியும் எங்களை அசிங்கப்படுத்திடீங்க" என கோபப்பட, கோடீஸ்வரன் "கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ராதிகா" என அவளை அடக்கிவிடுகிறார். 


"தப்பு செய்வது சகஜம் தான் அதனால் உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். இனிமேல் இந்த மாதிரி நடக்க கூடாது" என வார்ன் செய்து பாக்கியவை அனுப்பிவிடுகிறார். செல்வியும் பாக்கியாவும் கோடீஸ்வரன் சாருக்கு நன்றி சொல்லிவிட்டு வருகிறார்கள். வெளியே வந்த பாக்கியா அவளுடைய டீமில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும்  அட்வைஸ் செய்கிறாள். அவர்களும் இனிமேல் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்கிறார்கள். செல்வியிடம் "நான் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டு போனேன்" என பாக்கியா சொல்ல செல்வி அவளுடைய புருஷன் குடித்துவிட்டு வந்து குழந்தைகளை அடித்ததை பற்றி சொல்லி கண்ணீர் விடவே பாக்கியா அவளை மன்னித்து ஆறுதல் சொல்கிறாள். பழனிச்சாமியும் லோபித்தவும் பாக்கியாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். 


 



ராதிகா நல்ல செய்தியுடன் வருவாள் என மிகவும் ஆவலாக காத்துகொண்டு இருக்கிறார். ராதிகா வீட்டுக்கு வந்ததும் "பாக்கியா நடுத்தெருவுக்கு வந்துட்டாளா" என சந்தோஷமாக கேட்க ராதிகா நடந்தை சொல்லி "நாம நினைச்சது எதுவுமே நடக்கல கோபி" என சொன்னதும் அதிர்ச்சியடைகிறார் கோபி. 


சமாதானப்படுத்தி கொண்ட கோபி "அவ சமையலில் ஒரு தடவை சொதப்பி இருக்கா என்றால் அவள் தடுமாற ஆரம்பிச்சுட்டா என அர்த்தம், சீக்கிரமா அவள் சறுக்கிடுவா. இதை எல்லாம் நாம பார்க்க தான் போறோம்" என சொல்லி அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்ததது.