விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா கேன்டீன் பொறுப்புகளை எல்லாம் செல்வியிடமும்  மற்றவர்களிடம் கொடுத்து விட்டு ஜாக்கிரதையாக செய்யணும் என சொல்லிவிட்டு காலேஜ் கிளம்புகிறாள். அங்கு இனியாவின் தோழிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது பாக்கியா வந்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கிறாள். 


இனியாவின் தோழி ஒருத்திக்கு ஒரு பிரச்சினை. அவளுடன் ஸ்கூலில் படித்த பையன் ஒருவன் வேறு ஒரு காலேஜில் சேர்ந்து விட்டான். இப்போது தனக்கு ப்ரொபோஸ் செய்துள்ளான். இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அந்த பொண்ணும் குழப்பத்தில் இருக்க இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என சூப்பர் ஐடியா ஒன்றை சொல்கிறாள் பாக்கியா. அதை பார்த்த இனியா "நீ எப்படி மா இப்படி மாறிட்ட" என பாக்கியாவிடம் சொல்கிறாள். 



பாக்கியா காலேஜ் சென்றதும் கேன்டீனில் பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்போது செல்வியின் மகன் போன் செய்து "அப்பா குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்" என சொன்னதும் கோபமாக செல்வி பேசிக்கொண்டே காலிஃபிளவரை கருக விடுகிறாள். ரய்தாவில் உப்பு போடவில்லை என நினைத்து மறுபடியும் உப்பை போடுகிறாள். ராதிகா வந்து சாப்பாடு ரெடியா என கேட்டதும் செல்வி எல்லாம் ரெடி என சொல்கிறாள். வந்தவர்கள் சாப்பாடு நன்றாக இல்லை என சொல்லிவிட்டதால் பெரிய பிரச்சனை செய்கிறாள் ராதிகா. 


பழனிச்சாமியும் லோபிதாவும் பாக்கியாவின் காலேஜுக்கு வந்து அன்றைக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதை பாக்கியாவுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். அப்போது செல்வி பாக்கியாவுக்கு போன் செய்து "நீ உடனே வா அக்கா, இங்க பெரிய பிரச்னையாகிவிட்டது" என்று சொல்லி கேன்டீனுக்கு வர சொல்கிறாள். 


கேன்டீனுக்கு பாக்கியா வேகவேகமாக வருகிறாள். அங்கே ராதிகா அனைவரையும் பயங்கரமாக திட்டி கொண்டு இருக்கிறாள். நடந்த விஷயங்களை நானே சொல்கிறேன் என ராதிகா சொல்கிறாள். "காலிபிளவர் மஞ்சூரியன் நல்லா கரிக்கட்டை மாதிரி இருந்தது. வாயில வைக்க முடியவில்லை. நல்லா எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டீங்க" என கத்துகிறாள். 


பாக்கியா மன்னிப்பு கேட்க "மன்னிப்பு கேட்டால் எல்லாம் முடிந்து விடுமா?" என்கிறாள் ராதிகா. "இந்த முறை மட்டும் மன்னிச்சுடுங்க" என பாக்கியா சொன்னதும் "இன்னும் கேன்டீன் உங்ககிட்ட இருக்கும் என நம்புறீங்களா? கோடீஸ்வரன் சார் கிட்ட சொல்லிட்டேன். நீங்க கிளம்பிட வேண்டியதுதான்" என ராதிகா சொன்னதும் அதிர்ச்சியாகிறாள் பாக்கியா. 



பாக்யா தலையில் அடித்து கொண்டு அழுகிறாள். செல்வி எல்லாம் என்னுடைய தப்புதான் அக்கா.. என்னை மன்னிச்சுடு.. என கெஞ்சுகிறாள். "உங்களை நம்பி விட்டுட்டு போய் இருக்க கூடாது. எல்லாம் என்னுடைய தப்புதான். இப்படி தப்பு பண்ணா நம்மளை கீழே புடிச்சு தள்ளிடுவாங்க. நம்மள மாதிரி சாதிக்க நினைக்கிற மற்ற பெண்களையும் இப்படித்தான் என சொல்லி முன்னேற விட மாட்டாங்க" என அழுது புலம்ப பழனிச்சாமி அவர்கள் இருவரையும் சமாதானம் செய்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.