தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி வீட்டுக்கு வந்த பரணி இசக்கி அடித்ததற்காக அவனைத் திட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக சொன்ன முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான். மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வேலை போய்விடும் என முத்துப்பாண்டி பயப்பட, பரணி வீடியோ ஆதாரத்தை வைத்து இசக்கியிடம் மன்னிப்பு கேட்டால் மன்னித்து விட்டு விடுகிறேன் என்று வார்னிங் கொடுக்கிறாள். 


உடனே சௌந்தரபாண்டி பரணியின் போனை புடுங்கி வீடியோவை டெலிட் செய்ய, அவள் நான் “ஏற்கெனவே கிளவுட் ஸ்டோரேஜில் வீடியோவை ஏத்தி தான் வச்சிருக்கேன்” என்று காட்ட முத்துப்பாண்டி வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கிறான். 


அதைத்தொடர்ந்து இசக்கிக்கு கட்டு போடும் பரணி, “அவ அடிச்சா நீ திருப்பி அடிக்க மாட்டியா” என்று திட்ட, “இனிமே அடிக்கிறேன்” என சொல்கிறாள். இனிமே இசக்கிக்கு ஒன்னும் ஆகாது என்று பாக்கியம் சொல்ல “ஏன் அவள் அடிக்கும்போது நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா?” என்று திட்ட, இசக்கி “அத்தை என்னை நல்லா தான் பாத்துக்கிட்டாங்க” என்று சப்போர்ட் செய்கிறாள். 


மறுபக்கம் கனி பசியால் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க, வைகுண்டம் “ஏன் ஆத்தா சாப்பிட வேண்டியதுதானே?” என்று சொல்ல, கனி “இன்னும் எதுமே சமைக்கல, ரத்னா அக்கா ஸ்கூல்ல இருந்து வரல” என்று சொல்ல, இவர்கள் “இசக்கி இருந்து இருந்தா இந்நேரம் எல்லாருக்கும் புடிச்சதை சமைச்சு வச்சிருப்பா” என்று யோசிக்கின்றனர். 


சண்முகம் வீட்டுக்கு வர கனி சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க, பரணிக்கு போன் பண்ணேன் எடுக்கல என்று சொல்ல, பரணி கையில் சாப்பாட்டுடன் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்து கனி சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.