ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வடிவேலு நகையை அடகு வைத்திருந்த விஷயம் தெரிய வந்து அதனை மீட்டெடுத்த நிலையில், பழனியின் சதி வேலை தெரிய வந்து அவன் கைதாகினான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அன்னலட்சுமி கதிரேசன் போட்டோ முன் நின்று “நம்ம குடும்பத்துக்கு வர இருந்த அவமானத்தை நம்ம மருமக தடுத்து நிறுத்திட்டா” என வேண்ட, அமுதா அன்னலட்சுமியிடம், “இனிமே நீங்க வேலைக்கு போகக் கூடாது” என சொல்கிறாள். அடுத்ததாக அமுதாவுக்கு டாக்டர் போன் செய்து “நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார், செந்தில் ரிப்போர்ட்டை பார்த்தவுடன் ஒரு சின்ன ஆபரேஷன் செய்தால் கண் பார்வை திரும்ப வந்து விடும்” என உடனே கிளம்பி வருமாறு சொல்கிறார்.


அமுதா செந்திலுடன் கிளம்பிச் செல்ல அன்னலட்சுமி போகும் போது கோயிலுக்குச் சென்று விட்டு செல்லுமாறு சொல்கிறாள். இங்கே ஹாஸ்பிட்டலில் மாயாவிடம், நர்ஸ் ஒருவர் செந்திலுக்கு ஆபரேஷன் நடக்கும் விஷயத்தை சொல்ல, “மாயா என் வாழ்க்கை எனக்கு கிடைக்க போகுது” என சந்தோஷப்படுகிறாள். மறுபக்கம் வடிவேல் குமரேசனிடம் “செந்திலுக்கு கண் பார்வை வந்துவிடும், இன்னைக்கு மத்தியானம் ஆபரேஷன்” என சொல்கிறான்.


உமா, “என் புருஷன் ஜெயில்ல இருந்து வர்றதுக்குள்ள செந்திலுக்கு கண் பார்வை போகனும், புருஷன் கூட ஆஸ்பிட்டலுக்கு அமுதா போனா தான கண் பார்வை கிடைக்கும். மாமா அந்த செந்தில் பயலை தூக்கிருங்க” என சொல்ல, குமரேசன் ரவுடிகளை ஏற்பாடு செய்கிறான். அமுதாவும் செந்திலும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்ய ரவுடிகள் கோவிலுக்குள் வந்து செந்திலை தூக்கி செல்கின்றனர். அமுதா கண்களை மூடி வேண்டிக் கொண்டிருக்கிறாள். டாக்டர் அமுதாவுக்கு போன் செய்து சீக்கிரம் வருமாறு சொல்ல, செந்திலை தூக்கி போவதை பார்த்த பூக்கடை சிறுமி விஷயத்தை அமுதாவிடம் வந்து சொல்கிறாள்.


ஆட்டோவில் ரவுடிகள் செந்திலை கடத்தி செல்ல, செந்தில் தன் கையிலிருந்த குங்கும பாக்கெட்டை பிரித்து  ரோட்டில் கொட்டியபடி செல்ல அமுதா ரோட்டில் செந்திலை தேடி ஓடி வருகிறாள்.. அன்னலட்சுமி அமுதாவுக்கு போன் செய்து ஹாஸ்பிட்டல் போயிட்டீங்களா என கேக்க அமுதா பதில் சொல்ல முடியாமல் பதறுகிறாள் .


அதனை தொடர்ந்து அமுதா அன்னலட்சுமியிடம் செந்திலை கடத்தி விட்டார்கள் என விஷயத்தை சொல்ல , அன்னம் அதிர்ச்சி அடைகிறாள். அமுதா ரோட்டில் குங்குமம் கொட்டி இருப்பதை பார்த்து அதனை பாலோ செய்து செல்கிறாள். மாயா ஹாஸ்பிட்டலில் பதட்டத்துடன் இருக்க அன்னலட்சுமி கதிரேசனை நினைத்து வேண்ட, ரவுடிகள் செந்திலை குடோனில் அடைத்து வைக்கின்றனர்.


ஹாஸ்பிட்டலில் செந்திலுக்காக டாக்டர் காத்திருக்கும் பரபரப்பான சூழலில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.