ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அன்னலட்சுமி அமுதாவின் தாலியை கழட்டி கொடுக்க சொன்ன நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அனைவரும் பஞ்சாயத்தில் காத்திருக்க, செந்திலின் பாட்டி (கதிரேசன் அம்மா) வர பஞ்சாயத்தை பாதியில் நிறுத்துகின்றனர். சிதம்பரம் “யார் நீங்க” என கேக்க, “ஓ... நீ தான் என் பேரனோட மாமனாரா?” என்று கேட்கிறார். 




மேலும் “நீ ஒழுக்கமானவனா இருந்திருந்தா அமுதாவை சின்ன வயசுலயே படிக்க வச்சிருக்கனும்” எனத் திட்டுகிறார். அடுத்ததாக அன்னத்தை பார்த்து “என்ன அன்னம் நான் வீட்டு பக்கம் வர்றது இல்லேன்னு உனக்கு குளிர்விட்டு போச்சா?” என சொல்ல, “உன் பிள்ளைய படிக்க வச்சி வாத்தியார் ஆக்கனும்னு வைராக்கியமா இருந்தா அவன் படிக்கலாம், உன் மருமக படிக்கக் கூடாதா?” எனக் கேள்வி கேட்கிறார்.


அடுத்ததாக செந்திலைப் பார்த்து, “அந்த புள்ளையை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்ட. அவ நீ படிக்கனுங்குறதுக்காக அம்புட்டு பாடுபட்டிருக்கா, அவ படிக்கனும்”னு சொல்லும் போது, “நீங்க ஒத்தாசை பண்ண மாட்டீகளோ?” எனக் கோபப்படுகிறார். 


அடுத்ததாக அமுதாவிடம், “உங்க அத்தை அப்படி என்ன தப்பா சொல்லிபுட்டா, ஒழுங்கா குடும்பம் நடத்தி பிள்ளையை பெத்துக்கோன்னு சொல்றா, அது தப்பா?” எனக் கேட்க,  “இனி உங்க ரெண்டு பேர் பஞ்சயாத்தை வீட்டுல வச்சு பார்த்துக்குறேன்” எனச் சொல்லி கிளம்புகிறார். 




அதனைத் தொடர்ந்து பாட்டி வீட்டிற்கு வந்து காபி கேட்க, காபியை அமுதா எடுத்து வரப் போக, பாட்டி அன்னமிடம் “நீ தான என் மருமக, உன்னை தான் சொன்னேன், போய் காபியை எடுத்துட்டு வா” என அதட்ட, அன்னம் சென்று காபியை எடுத்து வந்து பாட்டியிடம் குடுக்கும் போது அன்னத்தின் கை நடுங்குகிறது. 


பாட்டி காபியைக் குடித்து விட்டு, “இதென்ன காப்பியா, உன் காபியை குடிச்சி குடிச்சி தான் என் பையன் மேல போயிட்டான்” எனப் பேசுகிறார். பாட்டி குளித்து விட்டு திருவாசகம் பாட, மற்றவர்கள் பாட முடியாமல் திணற அமுதா பாடுகிறாள்‌. பாட்டி என்ன முடிவு என்ன சொல்லப் போகிறார் என்கிற பதட்டத்துடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.  இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.