விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி தொடரின் நேற்றைய எபிசோடில் 18 லட்சம் ரூபாயை கொடுத்து ராதிகாவையும் கோபியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறாள் பாக்கியா. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். 


வீட்டை யார் பெயரில் மாற்றி எழுதுவது என்ற பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எங்க பெயரில் வீடு இருந்தா நாளைக்கு அதற்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரும்பவும் கோபி வந்து நிற்பான் என ஈஸ்வரி சொல்ல, அப்போ யார் பெயரில் வீட்டை ரிஜிஸ்டர் செய்வது எனக் கேட்கும் போது இருவரும் உன் பெயரில் தான் எழுத போகிறோம் என சொல்லவும், அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் பாக்கியா. இது வரையில் நீ உனக்காக எதுவும் செய்து கொண்டது கிடையாது அதனால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என ஈஸ்வரி சொல்ல பாக்கியா அதற்கு சம்மதிக்கிறாள்.


 




ராதிகாவின் வீட்டுக்கு திரும்பிய இருவரும் நடந்த விஷயங்களை ராதிகாவின் அம்மாவிடம் சொல்கிறாள் ராதிகா. எரிகிற நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவது போல கோபியிடம் "இது நீ கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய வீடு. அதை விட்டுட்டு நீங்க எப்படி வரலாம். நீங்க இரெண்டு பேரும் வந்து இருக்க கூடாது" என சொல்கிறார். இனிமேல் அங்கே இருந்தால் அசிங்கம். ஏற்கனவே ஏதாவது செய்து பாக்கியாவை திரும்பவும் கோபியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என என்னென்னவோ செய்தார்கள். அந்த பாக்கியாவும்  ரொம்ப ஓவரா பேசுறாங்க. அப்படி என்ன தான் செய்து எல்லாரையும் மயக்கி வைத்து இருக்குறாங்க என தெரியவில்லை என்கிறாள். 


கோபமாக ரூமுக்குள் சென்ற கோபியை சமாதானம் செய்வதற்காக செல்கிறாள் ராதிகா. என்கிட்ட இருந்து என்னோட அப்பா, அம்மா, பசங்களை பிரித்து விட்ட பாக்கியாவை நான் நிச்சயம் பழிவாங்காமல் விடமாட்டேன்.  எல்லாரையும் அவ கிட்ட இருந்து பிரித்து நடு தெருவில் நிற்க வைக்க போகிறேன். அதெல்லாம் உங்களால் முடியாது என ராதிகா சொல்ல, உனக்கு என்ன பத்தி தெரியாது ராதிகா என கோபத்தில் கொந்தளிக்கும் வில்லன் போல பேசுகிறார் கோபி.


 




ஈஸ்வரி அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் காசிக்கு செல்கிறார்கள். எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. இந்த வீட்ல இருக்கவே பிடிக்கல. ஒரு வாரம் நான் அவங்களோட கோயிலுக்கு போய்ட்டு வந்தா நிம்மதி கிடைக்கும் என்று சொல்ல, உனக்கு அது தான் சந்தோஷம்னா தாராளமா போயிட்டு வா என்கிறார் ராமமூர்த்தி. 


மீண்டும் தண்ணி அடிப்பதற்காக பாருக்கு போய்விட்டார் கோபி. அவரின் நண்பனிடம் வீடு கையை விட்டு போனது பற்றியும் பாக்கியா கேட் அவுட் என சொன்னது பற்றியும் சொல்லி புலம்புகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.