‛பயில்வான் ரங்கநாதனைப் பார்த்தால் பளார்...’ கொந்தளிக்கும் பிரபல சீரியல் நடிகர்!

சின்னத்திரையில் அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் குமார் ராஜன்

Continues below advertisement

நடிகர் பயில்வான் ரங்கநாதனை நேரில் பார்த்தா அறையணும்ன்னு தோணும் என சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

சின்னத்திரையில் அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் குமார் ராஜன். இவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி நாடகத்தில் சூர்யா கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் வன்னியர்களை இழிவுப்படுத்துவதாக சர்ச்சை எழுந்த போது, தான் ஒரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன் தான். ஆனாலும் சூர்யா சாருக்கே என சப்போர்ட் என கூறி வீடியோ வெளியிட்டார். 

இதனிடையே ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பள்ளியில் படிக்கும் போது நாடகத்தில் நடித்ததால் நடிப்பின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. எம்பிஏ படிச்சிட்டு எம்.என்.சி. கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். நடிப்புக்காக ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வாங்குன வேலையை விட்டுட்டேன். அதேபோல் 12 வருஷமா இந்த துறையில் இருக்கிறேன். மக்கள் என்னை ஏத்துகிட்டாங்க.ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி காட்டணும்ன்னு நினைக்கிறேன் என அருண் குமார் ராஜன் கூறியுள்ளார். 


பயில்வான் ரங்கநாதன் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு எல்லாருக்கும் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். அவங்களோட சூழ்நிலை மத்தவங்களுக்கு புரியாது. அப்படி இருக்கையில் ஒரு பெண் ஊடகத்தில் இருந்தால் என்ன வேணும்னாலும் பேசலாமா? யாரு அதிகாரம் கொடுத்தது இவங்களுக்கு என கேள்வியெழுப்பியுள்ளார். அவர் பேசியதால் எத்தனை பேர் அழுதிருப்பாங்க. எனக்கும் அவரை நேரில் பார்த்தால் அறையணும் போல இருக்கும் என அருண் குமார் ராஜன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola