தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பழமொழிகளில் நடித்து வரும் நடிகை  டாப்ஸி பண்ணுவின் நடிப்பில் ஹிந்தியில் டொபாரா என்ற படம் வெளியாகவுள்ளது. தமிழில் ஜன கன மன என்ற தமிழ் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார் நடிகை டாப்ஸி. பல தமிழ் படங்களில் டாப்ஸி நடித்து இருந்தாலும், ஆடுகளம் படத்தில் வாட் இஸ் யூர் நேம் வாட் இஸ் யூர் ப்ராப்ளம் என்று தனுஷை பார்த்து கேள்வி கேட்கும் சீன் கண்ணுக்குள்ளே நிற்கிறது.


பாலிவுட்டில் இவருக்கும் நடிகை கங்கனாவிற்கும் டஃப் காம்பட்டிஷன் நிலவி வருகிறது. கூடிய விரைவில் வெளியாகவிருக்கும் டொபாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், காஃபி வித் கரண் எனும் பிரபல பாலிவுட் ஷோ பற்றி கலாய்த்து பேசியுள்ளார் டாப்ஸி.






டொபாரா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில்  டாப்ஸியை பார்த்து, ஏன் உங்களை  காஃபி வித் கரண் ஷோவில்  பார்க்கமுடியவில்லை என்று செய்தியாளர் கேட்க, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்  அளவிற்கு எனது செக்ஸ் லைஃபில் எதும் சுவரஸ்யமாக அமையவில்லை என்று பதிலளித்துள்ளார்..காஃபி வித் கரண் என்னும் ஷோ முதன் முதலில்  2004 ஆண்டு துவங்கியது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் நடந்து வருகிறது.


இந்நிகழ்ச்சியில், பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் கேட்கும் கேள்விகளால் பல சர்ச்சை எழுந்துள்ளது. சமீபமாக, நடிகை கரீனாவிடம், குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு ஒருவரின் செக்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என கேட்டார். அதற்கு கரீனா உங்களுக்கும்  இரட்டை குழந்தை  பிறந்துள்ளதே உங்களுக்கு இதை பற்றி தெரியாத என நெற்றி அடி  கேள்வி கேட்டார்


அதற்கு கரண் ஜோஹர், எனது அம்மா இந்த ஷோவை பார்த்து கொண்டிருப்பார்.இதைப்பற்றியெல்லாம் இங்கு பேச முடியாது என்றார். அதற்கு உடன் இருந்த நடிகர் ஆமீர், அப்போ உங்கள் அம்மா மற்றவர்களின் செக்ஸ் வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்பதை பற்றி கேட்கமாட்டாரா? என இவர் பங்குக்கு சூப்பர் கேள்வி கேட்டார்.


இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில், ஆலியா பட், ரன்வீர் சிங், அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா, சாரா அலி காண், ஜான்வி
கபூர் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரிடமும், கோளாரான 
கேள்விகளை கரண் ஜோஹர் எழுப்பினார் என்பது குறிப்பிடதக்கது.


இதில் ஹைலைட் என்னவென்றால், 2007-ல் சிறந்த டாக் ஷோ தொக்குப்பாளர் என்ற விருதை கரண் ஜோஹருக்கு  இந்திய தொலைக்காட்சி அகாடமி வழங்கியது.