அயன், மாற்றான், காப்பான் என ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்துக்கு சூர்யா வராததால், அவர் நன்றி மறந்தவராக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 


முதல்வன், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட ஷங்கர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி. ஆனந்த், கடந்த சில ஆண்டுகளாக ஷங்கரை போல் பிரமாண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த் கடந்த 2021ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். 


இந்த நிலையில் அவரது மகளின் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதில் விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட  நடிகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஆனால், அவரது இயக்கத்தில் உருவான அயன், மாற்றான், கவண் படங்களில் நடித்த சூர்யா கே.வி ஆனந்தை மறந்ததாகவும், அதனால் அவரது மகளின் திருமணத்தில் பங்கேற்கவில்லை என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.





“தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான்  சினிமா டிசைன்...


அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழாவில், அவரது இயக்கத்தில் நடித்த பல ஹீரோக்கள் வரவில்லை.. ஆனால் விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஒதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நன்றி மறவாத குணம் தான் சேதுவின் தனித்துவம்” என இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.