இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக திரையுலக பயணத்தை தொடங்கிய வசந்த் கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளை வசந்த் படமாக மாற்றியுள்ளார்.


படத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கின்றன. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த ஆந்தாலஜி சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது ஆதரவை கொடுத்தனர். மேலும், பெண்களை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் வசந்த தனது காட்சியமைப்பிலும், கதை சொல்லல் விதத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் எனவும் பாராட்டினர். இந்நிலையில் அந்த திரைப்படம் தேசிய விருதைப் பெற்றுள்ளது. 



.


இந்நிலையில் அன்று படம் வெளியான போது, நடிகர் சூர்யா,  சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தை வெகுவாக பாராட்டினார். அன்று அது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு கிடைத்துள்ள மனதுக்கு இதமான வரவேற்பை கண்டு மிக்க மகிழ்ச்சி... 


 






படத்தை மிகவும் விரும்பி பார்த்து ரசித்தேன். வசந்த் சாரின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது. வசந்த் சாருக்கும், அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார். நடிகர் சூர்யாவை நேருக்கு நேர் படம் மூலம் இயக்குநர் வசந்த் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ”விருது கிடைச்சதே 25 வருஷங்களுக்குப் பிறகுதான் தெரியும்” : அலறவிட்ட பேய்ப்பட நாயகி ஓப்பன் டாக்..


‛டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!