சூர்யா நடித்து தயாரித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்  “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், முன்னோட்டம், ஆகியவை மக்களிடம்  வரவேற்பை பெற்ற நிலையில்,அண்மையில் படத்தில் இருந்து “வாடா தம்பி, உள்ளம் உருகுதைய்யா” உள்ளிட்ட பாடல்கள் வெளியிடப்பட்டன.


சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 4 ஆம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடி வாசல் படத்திலும், இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.






 


இவருக்கு தமிழில் இருப்பது போலவே ஆந்திராவில், கேரளாவில் ஏராளானமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது பிறந்தநாளன்று, சூர்யாவுடன் தான் இருக்கும் (பென்சிலால் வரையப்பட்ட ஒரு புகைப்படம்) புகைப்படத்தை பார்த்து பெண் ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியடையும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  


 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்