”சூர்யா 40” படத்துல இப்படி அசத்தியிருக்காரு.. இயக்குநர் பாண்டிராஜ் கொடுத்த அப்டேட்

சூர்யா வாளுடன் நடந்துசெல்வது போன்ற புகைப்படம்  ஒன்று இணையத்தில் வெளியாகி  வைரலானது..

Continues below advertisement

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவின் 40-வது படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில்  சூர்யா வாளுடன் நடந்துசெல்வது போன்ற புகைப்படம்  ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் சூர்யாவின் கதாபாத்திரம் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என பேசத் தொடங்கினர்.

Continues below advertisement

சூர்யாவுடன் பாண்டியராஜ்

 

இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாண்டிராஜிடம் ரசிகர்கள், சூர்யா 40 குறித்த அப்டேட் கொடுங்கள் என கேட்க , அதற்கு பதிலளித்த அவர், "நிச்சயம் இது ஒரு கிராமத்து கதைதான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நீங்கள் எப்படி ஒவ்வொரு காட்சிகளையும்  ரசித்தீர்களோ, அதேபோல இந்த படத்தையும் ரசிப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை" என்றார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

இதேபோல நடிகர் சூர்யாவும் வாடிவாசல் படத்தின் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் "வாடிவாசல்". இந்த திரைப்படம் "வாடிவாசல் " என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழு. மேலும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்தே இந்த படத்தில் கதைக்களம் நகரும் என  எதிர்பாக்கப்படுகிறது. சூர்யா படத்தில் மதுரை தமிழில் பேசி அசத்துவார் என தெரிகிறது. இந்த திரைப்படம் சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்குப் பிறகு வெளியாகும் என தெரிகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola