ரெட்ரோ படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம்..ஓளிப்பதிவாளர் ஷ்ரேயஸின் சாமர்த்தியம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வொன்றை படக்குழு பகிர்ந்துள்ளது

Continues below advertisement

ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதிக்கு வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படாமாக உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் கம்பேக் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் பாடல் தற்போது வெலளியாக்யுள்ளன. படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு இப்போதே தொடங்கியுள்ளன. அந்த வகையில் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை காமிக் வடிவில் வெளியிட்டு வருகிறது படக்குழு .

படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம்

படப்பிடிப்பிற்காக வாரனாசி சென்றுள்ளது ரெட்ரோ படக்குழு, இரண்டு காட்சிகளை மட்டும் எடுத்து கிளம்புவது தான் பிளான். இதில் இரண்டாவது காட்சி டீசரில் காட்டப்பட்ட சூர்யா பூஜா ஹெக்டேவிடம் பேசும் காட்சி. இந்த காட்சியை மாலை நேரத்தில் எடுக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் முதல் காட்சியை எடுக்கவே அதிக நேரம் ஆனதால் இருட்டிவிட்டது. நைட் ஷூட்டிற்கு தேவையான லைட்ஸ் படக்குழு கொண்டு வரவில்லை. சூர்யாவும் செட்டிற்கு வந்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு முழித்துக் கொண்டிருக்க ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸூக்கு செம ஐடியா ஒன்று தோன்றுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்து உடனே 200 விளக்குகளை கொண்டு வந்து அதை ஏற்றிவைத்து லைட்களுக்கு பதிலாக பயண்படுத்துகிறார். ஒருபக்கம்  சூர்யா ஒரே டேக்கில் நடித்து முடிக்க பூஜா ஹெக்டேவும் க்யூட்டான ரியாக்‌ஷனால் இந்த காட்சியை சிறப்பாக மாற்றியுள்ளார்கள் 

Continues below advertisement
Sponsored Links by Taboola