தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாததால் தற்போது அவரின் அடுத்த படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இதுவரை சூர்யா நடித்ததிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகெங்கிலும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 


 


 




'கங்குவா' படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக 'சூர்யா 44' என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மாலத்தீவில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெளியான டீசர் வீடியோ திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. மிகவும் ஸ்டைலான சூர்யாவின் தோற்றம் மூலம் அது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.  மாலத்தீவில் எடுத்து முடிக்கப்பட்ட ஷெட்யூலை தொடர்ந்து ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 


 






 


ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில நாட்கள் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்த தகவல் நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நலமாக இருக்கிறார் என்பது தெரிந்த பின்னரே அமைதி ஆனார்கள். விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.