சூர்யாவின் 42 ஆவது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.


சூர்யாவின் 42 ஆவது படத்தை இயக்குநர் சிவா இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இந்தப்படம் குறித்தான அப்டேட் சிலவை வெளியாகியிருக்கின்றன. அந்த அப்டேட்களின் படி, இவர்கள் இணையும் படத்தின் பூஜை விரைவில் நடக்க இருப்பதாகவும், இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 




'எதற்கு துணிந்தவன்' வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘பிதாமகன்’ திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பற்றி சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடிவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார்.


 






எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாடிவாசல் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அண்மையில்  ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 


                                                       


முன்னதாக, ‘வாடிவாசல்’ படத்தை பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருந்த போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாமல் நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காக பாடல்கள் இருக்கும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.