தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ரஜினிகாந்தின் பேரன்கள் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.


பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினிகாந்த்:


இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் தனது பேரனுடன் காரில் இருப்பது போலவும், ரஜினிகாந்த் தனது பேரனை கொண்டு வகுப்பறையில் விட்டுச் செல்வது போலவும் புகைப்படங்கள் உள்ளது.






சூப்பர்ஹீரோ தாத்தா:

அந்த புகைப்படங்களுக்கு கீழே, தனது மகன் இன்று காலை பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவனது சூப்பர்ஹீரோ தாத்தா அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் நீங்கள்தான் சிறப்பானவர்.  அது திரையாக இருந்தாலும் சரி, நிஜமாக இருந்தாலும் சரி என் அன்பான அப்பா என்று பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் மகள் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அந்த பதிவின் கீழ் ரஜினிகாந்தை பாராட்டியும் வருகின்றனர்.


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அவர் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கக்கடத்தலை மையமாக கொண்டு அந்த படம் முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.


வேட்டையன் படத்தில் இந்தியாவின் பிரம்மாண்ட சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சனும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். அவருடன் மஞ்சுவாரியர், பகத் பாசில் ஆகியோரும் நடித்துள்ளனர்.


ALSO READ | Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!